இலங்கை

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

திருகோணமலை-கோமரங்காடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த நபரொருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 65 வயதுடைய ஹேரத் ஹமிகே விஜேரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒட்டிச்சங்குளத்தில் தேன் எடுப்பதற்காக சென்றபோது யானை தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இன்று (24) சுமார் 3.55 மணியளவில் கோமரங்கடவல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல […]

இலங்கை

தங்கக் கடனுக்கான உச்சபட்ச வரம்பில் கட்டுப்பாடு : இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

வாகனக் கடன் மற்றும் தங்கக் கடன்களுக்கான  தற்போதைய அதிகபட்ச LTV விகிதங்களை மேலும் கடுமையாக்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுகை சபை தீர்மானித்துள்ளது. புதிய விதிகள் நாளைய தினம் முதல் அமலுக்கு வரவுள்ளன. இதற்கமைய உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மதிப்பு விகிதம் (LTV) 70 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான தற்போதைய அதிகபட்ச கடன் மதிப்பு வரம்புகள் (LTV […]

ஐரோப்பா

EU வில் பிரித்தானியா சேர நினைத்தால் அதன் மறுப்பிரவேசம் துரிதப்படுத்தப்படும்!

  • May 24, 2026
  • 0 Comments

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர முடிவு செய்தால் அதன் மறுப்பிரவேசம் விரைவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றக் கூட்டத்திற்கான ஐரோப்பிய தூதுக்குழுவின் தலைவர் சாண்ட்ரோ கோசி (Sandro Gozi), ஐக்கிய இராச்சியம் மீண்டும் சேருவதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் “ஐரோப்பிய திட்டத்திற்கான ஒரு பெரிய வெற்றியாக” கருதும் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அதன் சேர்க்கை விரைவுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் முன்னாள் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் […]

இந்தியா

த.வெ.க ஆட்சி நீடிக்காது : குழந்தைகள் அம்மாவை தேடுவதுபோல ஓடிவருவார்கள் – ஸ்டாலின்!

  • May 24, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி 02 நாளைக்குக் கூட நீடிக்காது என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அவர்களுக்கு விழுந்தது சினிமா கவர்ச்சிக்கு விழுந்த வாக்குகளே தவிர, அரசியல் எழுச்சிக்கானது அல்ல. இந்த சினிமா கவர்ச்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது. இரண்டு ஆண்டுகள் கூட இந்த அரசு நீடிக்காது. குழந்தைகள் அம்மாவை தேடுவது போல மக்கள் கொஞ்ச […]

உலகம் செய்தி

ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஹோர்மூஸில் அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப்

  • May 24, 2026
  • 0 Comments

“ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டு, சான்றளிக்கப்பட்டு, கையெழுத்திடப்படும் வரை, அந்த நீர்வழிப்பாதையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை முழு வீச்சில் தொடரும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். “இரு தரப்பினரும் அவசரப்படாமல், நிதானமாகச் செயல்பட வேண்டும்,” என்று ட்ரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். “தவறுகளுக்கு இடமில்லை , ஈரானுடனான நமது உறவு மிகவும் தொழில்முறை சார்ந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் மாறி வருகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

உலகம் செய்தி

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்பு – 09 பேருக்கு பஹ்ரைனில் ஆயுள் தண்டனை

  • May 24, 2026
  • 0 Comments

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) உடன் தொடர்பு வைத்து பஹ்ரைனுக்கு எதிராக “விரோத மற்றும் பயங்கரவாதச் செயல்களில்” ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே வழக்கில் தொடர்புடைய மற்ற இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் முக்கிய இணையதளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்ததுடன், அதனுடன் தொடர்புடைய நிதி பரிமாற்றங்களுக்கும் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொழுதுபோக்கு

தமிழக முதலமைச்சர் விஜயிடம் திடீர் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

  • May 24, 2026
  • 0 Comments

ஓடிடி தளம் சரிவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் விஜயிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை கடிதத்தில்,  “மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள். கமல்ஹாசன் சார் கேட்டுக் கொண்டதைப் போல, தமிழக அரசு ஒரு ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கட்டத்தில் ஓடிடி சந்தை திடீரென உருவாகி மிக வேகமாக வளர்ச்சி பெற்றது. ஆனால் தற்போது அந்த சந்தை திடீரென […]

உலகம் செய்தி

லெபனானில் 10 பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு – இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை

  • May 24, 2026
  • 0 Comments

தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள 10 நகரங்கள் மற்றும் கிராமங்களின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. “ஹிஸ்புல்லா இலக்குகள்” மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறி இந்த கட்டாய இடப்பெயர்வு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் கர்னல் அவிச்சாய் அத்ராயீ, தாக்குதல் நடைபெறவுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு உடனடியாக நகர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்ஹாரா, டெய்ர் […]

உலகம்

தட்டம்மை நோய்த் தாக்கம் – வங்கதேசத்தில் 500இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

  • May 24, 2026
  • 0 Comments

வங்காளதேசத்தில் ஏற்பட்ட தட்டம்மை நோய்த் தாக்கத்தால் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் தெரியவந்துள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் திணறி வருவதாகவும், தீவிர சிசிச்சைப் பிரிவுகளில் படுகை பற்றாக்குறை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே நோயை கட்டுப்படுத்த நாடாளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் […]

உலகம் செய்தி

கடந்த 24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 33 கப்பல்கள் பயணம்

  • May 24, 2026
  • 0 Comments

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 33 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், எண்ணெய் டேங்கர்கள், கொள்கலன் கப்பல்கள் மற்றும் பிற வர்த்தகக் கப்பல்கள் இந்த பயணத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்களைத் தொடர்ந்து, அந்தப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.