இலங்கை

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்!

  • May 24, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடுப்புக்காவலில் இருந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என அடையளாம் காணப்பட்டுள்ளார். மதுபோதைக்கு அடிமையான குறித்த நபர் வீட்டில் அடிக்கடி தகறாரில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். மேற்படி முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் அவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்துள்ளனர். இதன்போது அவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த […]

உலகம் செய்தி

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் தயார் நிலையில்: விரைவில் பேச்சு!

  • May 24, 2026
  • 0 Comments

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் தயார் நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புதிய இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் ‘ஹார்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படுவது இணக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். ” சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் இதர நாடுகளின் தலைவர்களுடன் “அமைதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்” (Memorandum of Understanding) குறித்து “மிகவும் நல்ல முறையில் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளேன்.” என […]

இலங்கை செய்தி

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் விஜித ஹேரத்!

  • May 24, 2026
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேற்படி இரு நாடுகளும் விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் எதிர்வரும் மே 26 முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை இவ்விஜயத்தை மேற்கொள்கின்றார். நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் ஆஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் ஆகியோருடன் இரு தரப்பு சந்திப்பில் ஈடுபடவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். […]

இலங்கை செய்தி

தமிழர் விடயத்தில் ராஜபக்ச வழியிலேயே அநுர: இடதுசாரி தலைவர் குற்றச்சாட்டு!

  • May 24, 2026
  • 0 Comments

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டத்தில் ராஜபக்ச அரசாங்கம் கையாண்ட சில்லறைத்தனமான அணுகுமுறையையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பின்பற்றிவருகின்றது என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “வீதி அமைத்தல், பாலம் அமைத்தல் போன்ற அபிவிருத்தி திட்டங்களே தேசிய இனப்பிரச்சினைக்கான அணுகுமுறையென ராஜபக்ச அரசாங்கம் கருதியது. ஆனால் அந்த சில்லறைத்தனமான அணுகுமுறையை […]

இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கியுள்ளனரா FBI குழுவினர்?

  • May 24, 2026
  • 0 Comments

விசாரணையின் நிமித்தம் FBI சிறப்புக் குழுவினர் எவரும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் இணையவழித் திருட்டு மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்த மேலும் 625,000 டொலர் திருட்டு ஆகியவற்றை விசாரிப்பதற்காக FBI அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள மறுப்பறிக்கையில், “ பல நாடுகளில் உள்ள வழக்கமான […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பிரதான கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ள ‘சிறு கட்சி’!

  • May 24, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தற்போதைய சூழலில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால், வலதுசாரி கொள்கையுடைய பாலின் ஹான்சனின் One Nation கட்சி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் என புதிய கருத்துக்கணிப்பு   மூலம் தெரியவந்துள்ளது. பாரம்பரிய எதிர்க்கட்சிக் கூட்டணியான லிபரல் மற்றும் நேஷனல் கட்சிகள்  முழுமையாகத் துடைத்தெறியப்படும் துடைத்தெறியப்படக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ரெட்பிரிட்ஜ் குரூப் மற்றும் ஆக்சென்ட் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் […]

செய்தி விளையாட்டு

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ராஜஸ்தான் இன்று களத்தில்!

  • May 24, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 69 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி ஆரம்பமாகும். IPL தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி (நிகர ரன் விகிதம் 0.783), முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் (0.695 ), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (0.524) ஆகிய அணிகள் தலா 18 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களை […]

உலகம்

வெள்ளை மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!! ஒருவர் பலி!

  • May 24, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே  நேற்று பிற்பகல் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் பிரதான பாதுகாப்பு வலயத்திற்கு அருகிலுள்ள வீதியொன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்  காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், வளாகத்தின் பாதுகாப்பை  அதிகரிக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும்  இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் […]

செய்தி விளையாட்டு

அபார வெற்றியுடன் play-off வாய்ப்பில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்!

  • May 24, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. பின்னர் 197 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, ஸ்ரேயஸ் […]

இலங்கை

மோசமான வானிலை – 28000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

தற்போது நிலவும் மோசமான வானிலையால் 28,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 நபர்கள் இந்தத்  மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கம்பஹா மாவட்டத்தில்தான் அதிகபட்ச நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 3,950 குடும்பங்களைச் சேர்ந்த 15,313 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. மேலும், புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 நபர்கள், கொழும்பு மாவட்டத்தில் […]