ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வந்துள்ள EES திட்டம் – நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்!
ஐரோப்பிய நாடுகளில் மின்னணு (பயோ மெட்ரிக்) அமைப்பிலான சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பயணிகள் நீண்ட காத்திருப்புக்களை எதிர்கொள்கின்றனர்.
படகுப் பயணிகள் எல்லைச் சோதனைகளுக்காகத் துறைமுகத்தில் குறைந்தது 90 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் பலர், துறைமுகத்திற்குள் நுழைவதற்கே கூடுதலாக இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
இது M20 மற்றும் A2 போன்ற சுற்றியுள்ள சாலைகளில் “முழுமையான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்துகிறது.
கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சோதனை செய்யப்படும் EES செயற்திட்டம் காரணமாகவே நீண்ட தாமதங்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பிரான்ஸின் எல்லைப் பகுதிகளில் இந்த முறை நிறுவப்படாமையினால் அங்கு பயணிகள் எல்லைக் காவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




