இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கியுள்ளனரா FBI குழுவினர்?

விசாரணையின் நிமித்தம் FBI சிறப்புக் குழுவினர் எவரும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் இணையவழித் திருட்டு மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்த மேலும் 625,000 டொலர் திருட்டு ஆகியவற்றை விசாரிப்பதற்காக FBI அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இச்செய்தியை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள மறுப்பறிக்கையில்,

“ பல நாடுகளில் உள்ள வழக்கமான நடைமுறையைப் போலவே, கோரிக்கை விடுக்கப்படும்போது, அந்தந்த நாட்டுத் தரப்பினருடன் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்காக, அமெரிக்க தூதரகத்தில் FBI சட்டத் தூதுவர் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளது.

மாறாக வேறு சிறப்புக் குழுவினர் யாரும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை.” என்று கூறப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!