உலகம்

சீனா மீதான வர்த்தக வரியை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை

  • July 27, 2026
  • 0 Comments

கட்டாய உழைப்புப் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டுகளின் பேரில் சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் நியாயமற்றவை என்றும், அவை ஒருவித பாதுகாப்புவாதமே என்றும் சீனாவின் வர்த்தக அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த வரிகளை நீக்குமாறு வொஷிங்டனை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா உட்பட 60 வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து வரும் பொருட்கள் மீது அமெரிக்கா 10 தொடக்கம் 12.5 சதவீதம் வரை புதிய வரிகளை விதித்துள்ளது. கட்டாய உழைப்பின் மூலம் செய்யப்படும் இறக்குமதிகளைக் […]

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் , திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இலங்கை செய்தி

வெளிநாட்டு ஜோடிக்கு சைவநெறி முறைப்படி திருகோணமலையில் திருமணம்

  • July 27, 2026
  • 0 Comments

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் , திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருகோணமலை சாம்பல்தீவு பாம் பீச் ரிசோட் விடுதியில் வைத்து யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் முன்னிலையில் மைக்கல் என்பவரும், சன்ரா என்பவரும் இன்று (25) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இதன்போது ஒருவரை ஒருவர் இறுதி மூச்சு வரை இன்பத்திலும் துன்பத்திலும் அன்பு செய்து வாழ்வோம் என்று உறுதிகூறி குருவால் வழங்கப்பட்ட உருத்திராக்கம் […]

உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

நீதியரசர்களின் பதவிகாலம் நீடிப்பு: அமைச்சரவை அனுமதி

  • July 27, 2026
  • 0 Comments

உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 107(5) பிரிவின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் தற்போதைய ஓய்வு வயது 65 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய முன்மொழிவின்படி, இது 67 ஆண்டுகளாக நீடிக்கப்படும் என தெரியவருகின்றது. அதே பிரிவின் கீழ், மேல்முறையீட்டு நீதிமன்ற […]

ஐரோப்பா

ஐரோப்பாவின் மிக உயர்ந்த எல்ப்ரஸ் மலையில் 05 மலையேறிகள் உயிரிழப்பு

  • July 27, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிக உயரமான மலையான எல்ப்ரஸ் மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 05 பேர் உயிரிழந்துள்ளார். குறத்த ஐவரும் புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இறந்தவர்களில் இருவரின் உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. அதே நேரத்தில் மூன்று பேரின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருந்த மேலும் இரண்டு மலையேறுபவர்களும் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். ஜார்ஜியா எல்லைக்கு வடக்கே அமைந்துள்ள எல்ப்ரஸ் மலை திடீரென வானிலை மாற்றங்களுக்கு உள்ளாவதுடன், மலையேறுபர்களுக்கு கடும் […]

உலகம்

தாக்குதல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நேரத்தில் அமெரிக்கா பறந்தார் நெதன்யாகு

  • July 27, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்றைய தினம் (27.06) அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார். ஈரானுடனான போர் தொடங்கியதில் இருந்து ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறையாகும். இதன்போது ஈரான் குறித்து விவாதிக்கப்படவுள்ளதுடன், எங்கள் பாதுகாப்பைப் பாதுகாப்பதும், நம்மைச் சுற்றியுள்ள அமைதி வட்டத்தை விரிவுபடுத்துவதும் எங்கள் இலக்காக இருக்கும் என நெதன்யாகு காணொளி ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். இந்த மாதம் இரண்டு வாரங்களாக அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கத் […]

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

  • July 27, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, […]

ஐரோப்பா

புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் ஏற்பட்ட வளர்ச்சி – அஸ்ட்ராஜெனெகாவின் பங்குகள் உயர்வு

  • July 27, 2026
  • 0 Comments

ஐரோப்பிய சந்தைகளில் அஸ்ட்ராஜெனெகாவின் (AstraZeneca)  பங்குவிலைகள் இன்று திடீரென அதிகரித்தன. புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி காரணமாக அதன் பங்குகள் உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாத இறுதி வரையிலான மூன்று மாதங்களில் நிகர லாபம் 02 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து $2.51 பில்லியனாக உயர்ந்துள்ளது. புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கான மருந்துகளின் வளர்ச்சியால், இந்தக் காலாண்டில் மொத்த வருவாய் நிலையான மாற்று விகிதங்களில் 5 சதவீதம் அதிகரித்து […]

ஐரோப்பா

பாரிஸில் மூன்று பெண்கள் மீது கத்திகுத்து தாக்குதல்

  • July 27, 2026
  • 0 Comments

பாரிஸில் இன்றைய தினம் மூன்று பெண்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்கள் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் ஊடகங்களின்படி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் (Laurent Nunez), இது ஒரு “துணிச்சலான செயல்” என்று தெரிவித்ததுடன், […]

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப் பணி: அரசாணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

  • July 27, 2026
  • 0 Comments

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதையெடுத்து, “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அரசு வேலை வழங்கப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்; மேலும் இது தொடர்பான சிபிஐ விசாரணையைப் பாதிக்கும்” […]

ஐரோப்பா

தாய்லாந்தில் இத்தாலிய பிரஜைகளின் மோசமான நடத்தை – தூதரகம் மன்னிப்பு கோரியது

  • July 27, 2026
  • 0 Comments

05 இத்தாலிய பிரஜைகள் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் பெண் ஒருவரிடம் ஆபாசமான சமிக்ஞைகளை காட்டும் காணொளி வைரலாகியதைத் தொடர்ந்து இத்தாலிய தூதரகம் மன்னிப்பு கோரியுள்ளது. பாங்காக் மெட்ரோ ரயிலில் பயணித்த சுகாஸ் என்ற பெண் குறித்த ஐந்து பேரிடமும் சத்தத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த ஐவரும் அந்த பெண்ணிடம் நடுவிரலை காட்டி அநாகரிகமாக நடந்துக்கொண்டுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்ரே பெருநகர காவல் நிலையத்தில் குறித்த பெண் முறையிட்டதுடன், ஐந்து […]