ஐரோப்பாவின் மிக உயர்ந்த எல்ப்ரஸ் மலையில் 05 மலையேறிகள் உயிரிழப்பு
ரஷ்யாவில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிக உயரமான மலையான எல்ப்ரஸ் மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 05 பேர் உயிரிழந்துள்ளார்.
குறத்த ஐவரும் புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் இருவரின் உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன.
அதே நேரத்தில் மூன்று பேரின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அங்கு சிக்கியிருந்த மேலும் இரண்டு மலையேறுபவர்களும் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
ஜார்ஜியா எல்லைக்கு வடக்கே அமைந்துள்ள எல்ப்ரஸ் மலை திடீரென வானிலை மாற்றங்களுக்கு உள்ளாவதுடன், மலையேறுபர்களுக்கு கடும் சவாலாக விளங்குகிறது.




