இலங்கை

காலியில் வாடகைக்கு வீடு எடுத்து ‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட பெலாரஸ் நாட்டவர் கைது

  • October 19, 2025
  • 0 Comments

அக்மீமன(Akmeemana) பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டில் ‘குஷ்’கஞ்சா பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் அவர் கஞ்சா பயிரிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காக அவர் அந்த செடிகளை பயிரிட்டுள்ளதாக காவல்துறையினர் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த வீடு கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், சந்தேக நபர் வீட்டை வாடகைக்கு எடுத்து அதற்காக […]

இலங்கை

திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சரோஜா வேலைத்திட்டம்

  • October 19, 2025
  • 0 Comments

காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுங்கள் சரோஜா வேலைத்திட்டம் திருகோணமலை-மொரவெவ காவல்துறை பிரிவில் (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மொரவெவ காவல்துறை பொறுப்பதிகாரி கீர்த்தி சிங்ஹ அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதேசத்தில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் “சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுங்கள்”என எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தற்போது சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாட்டில் அதிகரித்து வருவதினால் பொலிஸ் திணைக்களத்தினால் பொதுமக்களை தெளிவூட்டும் விதத்தில் நாட்டில் அனைத்து காவல்துறை நிலையங்களிலும் குறித்த வேலை திட்டம் […]

இலங்கை

இலங்கையில் சற்று முன் இடம்பெற்ற கோர விபத்து – 12 பேர் படுகாயம்!

  • October 19, 2025
  • 0 Comments

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒன்பது சிறுவர்கள் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபுகஸ்கந்த பகுதியில் உள்ள ஒரு பாடசாலையைச் சேர்ந்த சாரணர் குழு படுவத்தே மகா வித்தியாலயத்தில் நடந்த  நிகழ்ச்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒரு தடுப்பணையில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், பேருந்தின் பிரேக்குகள் வேலை செய்யாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். விபத்து நடந்த […]

உலகம்

இந்தோனேசியாவில் வலுவான நிலநடுக்கம் பதிவு!

  • October 19, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் பப்புவா (Papua) மாகாணத்தில் இன்று  வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் செரம்பன் (Seremban) மாவட்டத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை, மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

ஐரோப்பா

பிரான்ஸில் உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகத்தில் கொள்ளை

  • October 19, 2025
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (Paris) உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) கொள்ளை சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கலாச்சார மையம் இன்று மூடப்பட்டுள்ளது. பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி ( Rachida Dati ) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அருங்காட்சியகக் குழுக்கள் மற்றும் காவல்துறையினருடன் நான் சம்பவ இடத்தில் இருக்கிறேன் எனவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திருட்டு சம்பவம் குறித்த […]

உலகம்

காசாவில் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இஸ்ரேலியப் படைகள்; 9 பேர் பலி

  • October 19, 2025
  • 0 Comments

காசாவில் ஒரு பேருந்தின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பாலஸ்தீனிய குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல், “ஜெய்துன்(Zaytun) பகுதிக்கு கிழக்கே இடம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அபு ஷபான் குடும்பத்தைச் […]

பொழுதுபோக்கு

“ஆறுமுகன் ஆளும் மண்ணில் வாழும் தமிழன் நான்” வாகீசனின் புதிய பாடல்…

  • October 19, 2025
  • 0 Comments

சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பகிரப்படுகின்ற ஒரு விடயம்தான் இலங்கை ராப் பாடகர் ஆன வாகீசனின் பாடல்கள். தற்போது டூ கே கிட்ஸ் கொண்டாடும் ராப் பாடகராக இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாகீசன் காணப்படுகின்றார். இதுவரை ராப் பாடல்களில் பட்டையை கிளப்பிய வாகீசன் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். இவர் “காக்கும் வடிவேல்” என்ற புதிய பாடலை ராப் மற்றும் பக்தியை கலந்து பாடியுள்ளார். ஆனால் கடவுள் பாடலானாலும் இவரது கூர்மையான வார்த்தைகள், ஒவ்வொரு […]

இந்தியா

இந்தியாவில் காற்றின் தரத்தை நிர்வகிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு!

  • October 19, 2025
  • 0 Comments

இந்தியாவில்  காற்றின் தரத்தை நிர்வகிப்பதற்கான வழிகள் குறித்து  அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் வானவேடிக்கைகள், மற்றும் பட்டாசுக்களை வெடிப்பார்கள். இதனால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்படும். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு தடை விதித்தது. இந்தியாவின் தலைநகரில்  காற்றின் தரமானது 300-400 என்ற அளவில் உள்ளது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் காற்று தரக் குறியீடு 300 க்கு மேல் […]

இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய மத்துகம பெண்ணிற்கு விளக்கமறியல்!

  • October 19, 2025
  • 0 Comments

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மதுகமவைச் சேர்ந்த பெண்ணை அக்டோபர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்துகம, வெலிபென்னவில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரான 52 வயது பெண்ணிற்கே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்துகமவைச் சேர்ந்த அந்தப் பெண்ணை முதலில் நீதித்துறை மருத்துவ அதிகாரி (ஜே.எம்.ஓ) பரிசோதனை செய்த பின்னர் கொழும்பு குற்றப்பிரிவு (சி.சி.டி) அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். […]

ஐரோப்பா

ரஷ்யாவில் வெடிமருந்து தொழிற்சாலை தீ விபத்து – 3 பெண்கள் பலி, 5 பேருக்கு காயம்

  • October 19, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் தெற்கு பிராந்தியமான பாஷ்கோர் டோஸ்தானில்(Bashkortostan) வெடிமருந்து தொழிற்சாலை செயல்படுகிறது. உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் அங்கு பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறியது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதற்குள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 பெண்கள் […]