பொருளாதார சிக்கலில் வெனிசுலா – இங்கிலாந்தின் பெட்டகத்தில் உள்ள தங்கத்தை மீட்க உறுதி
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ள வெனிசுலாவின் 31 டன் தங்கத்தை மீட்க அந்நாட்டின் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
2018-ல் ஐக்கிய இராச்சியம் வெனிசுலா அரசாங்கத்தை அங்கீகரிப்பதை நிறுத்தியது. இது நடைமுறையில் அந்தச் சொத்துக்களை அணுகுவதைத் தடுத்தது.
தற்போது அந்தச் சொத்துக்கள், இன்னும் தீர்க்கப்படாத ஒரு சட்டரீதியான சர்ச்சையில் சிக்கியுள்ளன.
கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தில் இருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப இந்த தங்கம் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பல ஆண்டுகளாக நிலவிய தவறான நிர்வாகம், ஊழல் மற்றும் அமெரிக்கத் தடைகளால் ஏற்கனவே பலவீனமடைந்திருந்த வெனிசுலா பொருளாதாரம், நிலநடுக்கங்களின் தாக்கத்தை தொடர்ந்து உணர்ந்து வருகிறது.
ஜூன் மாதத்தில் 13.8% ஆக இருந்த மாதாந்திர பணவீக்கத்தை, இந்த பேரழிவு ஜூலை மாதத்தில் 19.9% ஆக உயர்த்த உதவியதாகவும், பொருளாதார வல்லுநர்களால் ஆண்டு பணவீக்கம் சுமார் 575% ஆக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் தங்கத்தை மீட்க அந்நாட்டு அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது.




