இலங்கை

2025 ஆம் ஆண்டில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு – 22 பேர் உயிரிழப்பு

  • October 21, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அவர், கண்டறியப்பட்ட நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதிக ஆபத்துள்ள 11 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி […]

உலகம்

H-1B விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த காத்திருப்போருக்கு செக் வைத்த ட்ரம்ப் நிர்வாகம்!

  • October 21, 2025
  • 0 Comments

H-1B விசாவில் வெளிநாட்டு நபர் ஒருவரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 01 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும் என்ற தகவல் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த புதிய விதி புதிதாக விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும் என்றும் ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் ட்ரம்ப் நிர்வாகம்  அறிவித்துள்ளது. எப்-1 மாணவர் விசா அல்லது எல்-1 தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் தங்களது விசாவை H-1B விசாவிற்கு மாற்ற முற்படும்போது […]

பொழுதுபோக்கு

மீண்டும் ரீ-ரிலீஸாகும் ‘பிரண்ட்ஸ்’

  • October 21, 2025
  • 0 Comments

தமிழ் திரையுலகில் பழைய படங்களை மீண்டும் தூசுதட்டி வெளியிடும் ரீ-ரிலீஸ் மோகம் எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போ தளபதி விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்து மெகா ஹிட்டான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படம், மீண்டும் நவம்பர் 21 ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது. விஜய், சூர்யா, வடிவேலு, தேவயாணி, ரமேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘பிரண்ட்ஸ்’. மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், மிகப்பெரிய ஹிட் அடித்தது. அண்மையில் […]

உலகம்

அமெரிக்க அணுசக்தி நிறுவனம் பணிநிறுத்தம் காரணமாக 1,400 ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்

  • October 21, 2025
  • 0 Comments

தேசிய அணுப் பாதுகாப்பு நிர்வாகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 1,400 ஊழியர்கள் திங்கட்கிழமையிலிருந்து (20) வேலைக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட மற்றுமொரு வாக்கெடுப்புத் தோல்வியடைந்த நிலையில் அண்மை அறிவிப்பு வந்துள்ளது. அரசாங்க முடக்கம் தொடங்கி மூன்று வாரத்திற்கும் மேலாகிவிட்டது. “ஜனநாயகக் கட்சியினரின் முடக்கத்தால் தேசிய அணுப் பாதுகாப்பு நிர்வாகத்தின் கிட்டத்தட்ட 1,400 ஊழியர்கள் தற்காலிகமாக வேலையிலிருந்து அகற்றப்படுகின்றனர். மக்களையும் சொத்துகளையும் பாதுகாக்க நிர்வாகத்தின் ஏறக்குறைய 400 மத்திய ஊழியர்கள் தொடர்ந்து வேலை […]

இலங்கை

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்!

  • October 21, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறிவிட்டது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (21) குற்றஞ்சாட்டினார். தேர்தல் சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவருட காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி வழங்கி இருந்தது. எனினும், ஒரு வருடம் […]

இலங்கை

மீண்டும் பலமடைந்து வரும் மொட்டுக் கட்சி!

  • October 21, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிச்சென்ற ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் கட்சி வலுவடைந்துவருகின்றது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியானது 3 சதவீதமாகவே இருந்தது. எனினும், அது 69 லட்சமாக அதிகரித்தது. அதாவது […]

இலங்கை

ஜனாதிபதி அநுரகுமாரவின் வரவு – செலவுத் திட்டத்தை ஆராய சஜித் அணி விசேட குழு அமைப்பு

  • October 21, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. அதற்கமைய, முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தை ஆராய்ந்து, தர்க்க ரீதியிலான கருத்துகளை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இதற்காக கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் சில பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை அக்கட்சி நியமிக்கவுள்ளது. வெறுமனே விமர்சனங்களை முன்வைக்காமல், புள்ளிவிவரம் மற்றும் விஞ்ஞானப்பூர்வமான கருத்துகளை முன்வைக்கும் நோக்கிலேயே இந்தக் குழு […]

பொழுதுபோக்கு

அஜித் – KGF புகழ் பிரஷாந்த் நீல் இணையும் பான்-இந்தியா ப்ராஜெக்ட்

  • October 21, 2025
  • 0 Comments

தல அஜித் – KGF புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் மிகப்பெரிய படம் பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வெளிவருகின்றன. பிரஷாந்த் நீல் “KGF” மற்றும் “Salaar” போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமாவுக்கு புதிய லெவலை ஏற்படுத்தியவர். அவரின் கதை சொல்லும் பாணி, காட்சிப்படைத்திறன் மற்றும் மாஸ் பிரேம்கள், ரசிகர்களை உலகளவில் கவர்ந்துள்ளன. இப்போது அவர் தல அஜித் உடன் இணைவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மோகன்லால் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து […]

கருத்து & பகுப்பாய்வு

2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!

  • October 21, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த உணவு வகைகளைக் கொண்ட நாடுகளின் தரவரிசையில் இலங்கை 07 ஆவது இடத்தை பிடித்துள்ளது. காண்டே நாஸ்ட் டிராவலர்ஸ் ரீடர்ஸ் சாய்ஸ் (Condé Nast Traveler’s Readers’ Choice) விருதுகளின் அறிவிப்பில் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது. 95.56% என்ற மதிப்பெண்ணுடன் இலங்கை ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. துருக்கி, பிரான்ஸ், மொராக்கோ, கொலம்பியா, மாலத்தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் போன்ற சிறந்த நாடுகளை விட இலங்கை முன்னணியில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இலங்கை உணவு […]

உலகம்

ட்ரம்பின் பால்ரூம்(ballroom) திட்டத்திற்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி இடிப்பு

  • October 21, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நீண்ட நாள் ஆசையான அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாக வெள்ளை மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், வெள்ளை மாளிகையின் ஒருபகுதி இடிக்கப்பட்டு போல்ரூம் (ballroom) அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இது அவரின் கனவு என்பதோடு நீண்ட நாள் விருப்பம் ஆகும். […]