இலங்கை

#Breakingnews சற்றுமுன்னர் வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

  • October 22, 2025
  • 0 Comments

வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லசந்த விக்ரமசேகர மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை

இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பரபரப்பப்படும் பொய் பிரச்சாரம்

  • October 22, 2025
  • 0 Comments

இலங்கையில் மாகாணசபைத் தேர்தலைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போலி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியாகும் தகவல்களை ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவர் நிராகரித்துள்ளார். எல்லை நிர்ணயப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அடுத்த வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், தேர்தலைக் காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு ஆளுங்கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையிலேயே, […]

உலகம்

தென்சீனக் கடல் பகுதியில் நெருக்கடி – சீனா, ஆஸ்திரேலியா இடையே தீவிரமடையும் சொற்போர்!

  • October 22, 2025
  • 0 Comments

தென்சீனக் கடல் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கிடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படை அபத்தமான பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட ஆஸ்திரேலியக் கண்காணிப்பு விமானம், தமது நாட்டு வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது என சீனா கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியது. அத்துடன், இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் கண்டித்தது. ஆனால், சர்வதேச வான் பரப்பிலேயே தாம் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் நிபந்தனையை ஏற்காத அமெரிக்கா – ட்ரம்ப், புட்டின் சந்திப்பு இரத்து

  • October 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்ட் நகரில் இந்த சந்திப்பு நடக்கவிருந்த நிலையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா விதித்த நிபந்தனையை ரஷ்யா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பியுள்ள இரகசிய குறிப்பு ஒன்றில், டான்பாஸ் பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் உரிமை ரஷ்யாவுக்கே என வழங்கப்பட வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஒப்புக் கொண்டால் […]

செய்தி

செம்மணிப் புதைகுழி – சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெற தயாராகும் அரசாங்கம்

  • October 22, 2025
  • 0 Comments

செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்காக, சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைக்குச் சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து மேலும் விளக்கமளித்த அமைச்சர், செம்மணிப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்குச் சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. அத்துடன், எமது நாட்டுப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட […]

இலங்கை

இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தம் – பாடப்புத்தகங்களுக்குப் பதிலாகக் கையேடுகள்!

  • October 22, 2025
  • 0 Comments

இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தங்களில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாகக் கையேடுகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரையில் பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் காரணமாகவே சில வகுப்புகளுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ வழங்கிய தகவலுக்கமைய, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் வராத 2 முதல் 5 வரையான மற்றும் […]

கருத்து & பகுப்பாய்வு முக்கிய செய்திகள்

பூமியில் மறைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் – வெளிவரவுள்ள பல இரகசியங்கள்

  • October 22, 2025
  • 0 Comments

ஆதிப் பூமியின் மூலக்கூறுகள் சமகால பூமியின் ஆழமான பாறைகளில் இன்று பாதுகாக்கப்பட்டிருப்பதற்கான முதல் நேரடி ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாரிய மோதலின் பின்னர் சந்திரன் உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதலுக்கு முன்னமே ஆதிப் பூமியின் அனைத்துத் தடயங்களும் அழிந்திருக்கும் என ஆய்வாளர்கள் நம்பியிருந்தனர். எனினும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஆதிப் பூமியின் மூலக்கூறுகள் இன்றும் பூமியின் ஆழமான பாறைகளில் உள்ளமைக்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வாளர்கள் […]

வாழ்வியல்

தினசரி 7,000 அடிகள் நடந்தால் போதும் – புதிய ஆய்வில் வெளியான தகவல்!

  • October 22, 2025
  • 0 Comments

நாளாந்தம் 7,000 அடிகள் நடப்பது ஆரோக்கிய நன்மைகளைப் பெற போதுமானது என்று புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் (journal Lancet Public Health) வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நம்பப்பட்ட 10,000 அடிகள் இலக்கை விட, 7,000 அடிகள் நடப்பதே நாள்பட்ட ஆறு நோய்களின் அபாயத்தையும், அகால மரண அபாயத்தையும் கணிசமாகக் குறைக்கிறது என்று […]

இலங்கை

இலங்கையில் இறக்குமதி அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

  • October 22, 2025
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகாரசபை தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில், இந்த விலை திருத்தங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ […]

செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பாவை அச்சுறுத்தும் போர் அபாயம் – ஜெர்மனி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை

  • October 22, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் போர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயநிலைமை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 35 வருடங்களின் பின்னர் ஜெர்மனியின் சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு போன்று இல்லாதபோதும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வை மேற்கொண்ட அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு குறித்து ரஷ்யா விடுத்துள்ள அச்சுறுத்தல்களின் பின்னணியில், இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போருக்கு தயாராக இருக்க வேண்டும். […]