வரிசெலுத்துவோரின் பணத்தை புகலிட விடுதிகளுக்காக செலவழிக்கும் பிரித்தானிய அரசாங்கம்!
பிரித்தானிய அரசாங்கம் வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான பவுண்டுகளை புகலிட விடுதிக்காக செலவிட்டுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்பார்க்கப்படும் செலவுகள் மூன்று மடங்காக அதிகரித்து £15 பில்லியனைத் தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களை பராமரிப்பதற்காக அரசாங்கம் பல பில்லியன் பவுண்டுகளை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டில் வரி செலுத்துவோரின் சொத்துக்களை வீணடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. என்னதான் […]













