செய்தி

பீகாரில் பரவிய வதந்தி – கூட்ட நெரிசலில் சிக்கி 07 பேர் பலி

பீகாரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய தினம் சிவனுக்கு காணிக்கை செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தபோது, ​​இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் மீது மின் கம்பம் விழுந்துவிட்டதாக வதந்தி பரவியதை அடுத்து பீதி ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பீதியே கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக அமைந்தது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது நிலமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி