இந்தியா செய்தி

கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரிய நடிகர் விஜய்

  • October 27, 2025
  • 0 Comments

கடந்த மாதம் 27ம் திகதி தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின்(Tamilaga Vetri Kalagam) அரசியல் பேரணியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் குழந்தைகள் உட்பட 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று மகாபலிபுரத்தில்(Mahabalipuram) உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் […]

உலகம் செய்தி

தென் சீனக் கடலில் விபத்துக்குள்ளான இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள்

  • October 27, 2025
  • 0 Comments

தென் சீனக் கடலில் இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள் தனித்தனி சம்பவங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பசிபிக் கடற்படை(Pacific Fleet) தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய MH-60R சீ ஹாக்(Sea Hawk) ஹெலிகாப்டரின் மூன்று பணியாளர்களும், F/A-18F சூப்பர் ஹார்னெட்(Hornet) போர் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பசிபிக் கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு விபத்துகளுக்கான காரணங்கள் விசாரணையில் உள்ளன என்று பசிபிக் கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி […]

இந்தியா செய்தி

இந்தியாவில் சத் பூஜையை முன்னிட்டு குளிக்க சென்ற 6 பேர் மரணம்

  • October 27, 2025
  • 0 Comments

பீகாரின் பாகல்பூர்(Bhagalpur) மாவட்டத்தில் சத்(chhath) பண்டிகைக்கு முன்னதாக குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இஸ்மாயில்பூர்(Ismailpur) காவல் நிலையப் பகுதிக்குள் உள்ள நவ்டோலியாவில்(Navdolia) இந்த சம்பவம் நடந்ததாக நௌகாச்சியா(Naukachia) காவல்துறை அதிகாரி பிரேர்ணா குமார் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து சிறுவர்களும் 10-15 வயதுக்குட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து, பண்டிகையை முன்னிட்டு சோன்(Sone) நதியில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன இரண்டு பேரின் உடல்கள் ஜார்க்கண்டின் பலாமு(Palamu) மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளதாக […]

உலகம் செய்தி

54 ஹரியானா ஆண்களை இந்தியாவிற்கு நாடு கடத்திய அமெரிக்கா

  • October 27, 2025
  • 0 Comments

சட்டவிரோத வழியாக நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி, இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் OAE-4767 விமானம் மூலம் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-3ஐ வந்தடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில், 16 பேர் கர்னாலைச்(Karnal) சேர்ந்தவர்கள், 15 பேர் கைதாலைச்(Kaithal) சேர்ந்தவர்கள், 5 பேர் அம்பாலாவைச்(Ambala) சேர்ந்தவர்கள், 4 பேர் யமுனா(Yamuna) நகரைச் சேர்ந்தவர்கள், 4 பேர் குருக்ஷேத்ராவைச்(Kurukshetra) சேர்ந்தவர்கள், 3 பேர் ஜிந்த்(Jind), 2 […]

இந்தியா செய்தி

ராஜஸ்தானில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடைகளில் வேலை செய்ய தடை

  • October 27, 2025
  • 0 Comments

ராஜஸ்தான் அரசாங்கம், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியமர்த்துவதைத் தடை செய்யும் அவசரச் சட்டத்தை அங்கீகரித்துள்ளது. முதலமைச்சர் பஜன் லால் சர்மாவால்(Bhajan Lal Sharma) அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, குழந்தைகள் நலனை வலுப்படுத்துதல், சிறுவர்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் மாநில தொழிலாளர் சட்டங்களை தேசிய இணக்கம் மற்றும் பாதுகாப்பு தரங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முந்தைய ராஜஸ்தான் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 12 முதல் 15 […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது நபர் கைது

  • October 27, 2025
  • 0 Comments

வடக்கு பிரித்தானியாவில் 20 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “வால்சாலில்(Walsall) ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை இன ரீதியாக மோசமான தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம். 32 வயதான அந்த நபர் பெர்ரி பார்(Berry Bar) பகுதியில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் பின்னணி குறித்த விவரங்களை காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை […]

பொழுதுபோக்கு

பைசனின் மொத்த வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • October 27, 2025
  • 0 Comments

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்த பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி இருந்தது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் டீசல் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. இதில் டியூட் திரைப்படம் ஏற்கனவே 100 கோடியை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது பைசன் திரைப்படம் 10 நாட்களில் 55 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை

இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திடீர் சோதனை!

  • October 27, 2025
  • 0 Comments

இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையான புஸ்ஸா சிறைச்சாலையில் இருந்து 14  தொலைபேசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் சிறப்புப் படையின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலை தந்திரோபாயப் பிரிவு அதிகாரிகள், இன்று முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் குறித்த தொலைபேசிகள் கண்டறியப்பட்டுள்ளன. தொலைபேசிகளுடன் கூடுதலாக, 25 சிம் கார்டுகள் உட்பட பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் தரமற்ற வீட்டு வசதிகள் தொடர்பில் முறைப்பாடு!

  • October 27, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் தரமற்ற வீட்டு வசதிகள் குறித்த முறைப்பாடுகள் கடந்த 05 ஆண்டுகளை விட தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில், ஆபத்தான பூஞ்சைகள் மற்றும் காளான்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 வேலைநாட்களுக்குள் முறைப்பாடு அளித்த குத்தகைதாரர்கள்,  சொத்துக்களை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வீடுகளைப் பாதுகாப்பாக வைக்க முடியாவிட்டால் மாற்று தங்குமிட வசதிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குறித்த ஆபத்துக்களை […]

இலங்கை

“மோந்தா” புயல் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

  • October 27, 2025
  • 0 Comments

வங்காள விரிகுடாவின் வடகிழக்கில், இன்று காலை முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் “மோந்தா” சூறாவளி நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை அதிகாலை 5.30 மணியளவில் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி நாளை மாலை அல்லது இரவு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, மறு அறிவிப்பு வரும் […]