இலங்கை

“மோந்தா” புயல் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

  • October 27, 2025
  • 0 Comments

வங்காள விரிகுடாவின் வடகிழக்கில், இன்று காலை முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் “மோந்தா” சூறாவளி நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை அதிகாலை 5.30 மணியளவில் கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி நாளை மாலை அல்லது இரவு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, மறு அறிவிப்பு வரும் […]

பொழுதுபோக்கு

மீண்டும் ஹீரோவாகும் தனுஷின் மருமகன்

  • October 27, 2025
  • 0 Comments

நடிகர் தனுஷின் அக்கா மகனான பவிஷ் தனுஷ் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் ஹீரோ ஆனார். இந்த நிலையில், அடுத்த படம் குறித்து அப்டேட் வெளிவந்துள்ளது. பவிஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்துள்ளது. பவிஷ் தாத்தாவும், பிரபல இயக்குனருமான கஸ்தூரிராஜா படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். பவிஷ் மாமாவும், இயக்குனருமான செல்வராகவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த யூடியூப் பிரபலம் நாகதுர்கா ஹீரோயின், புதுமுகம் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு – அரசியல் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி!

  • October 27, 2025
  • 0 Comments

இலங்கையின் புதிய அரசாங்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் அரசியல் தலையீடு செய்யும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும் தகுதியான வேட்பாளர்களுக்கு மட்டுமே வெளிநாடுகளில் வேலை கிடைப்பதை உறுதி செய்யும் ஒரு வெளிப்படையான அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLFEB) 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சிறப்பு நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது […]

ஐரோப்பா செய்தி

பெலாரஸ் (Belarus) உடனான எல்லைகளை காலவரையறையின்றி மூடும் லிதுவேனியா!

  • October 27, 2025
  • 0 Comments

பெலாரஸ் (Belarus) உடனான எல்லைகளை காலவரையறையின்றி மூடுவதற்கு லிதுவேனியா (Lithuania) அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லைத்தாண்டி சிகரெட்டுக்களை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சில பலூன்களை அவதானித்துள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இன்று தெரிவித்துள்ளார். பலூன்கள் தென்பட்டதை தொடர்ந்து வெள்ளி, சனி மற்றம் ஞாயிற்றுக்கிழமைகளில் வில்னியஸ் விமான நிலையத்தில் (Vilnius Airport) விமான சேவைகள் தடைப்பட்டன. அத்துடன் சில விமானங்கள் திசை திருப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவசரமாக கூடிய லிதுவேனியாவின் தேசிய பாதுகாப்பு ஆணையம், […]

பொழுதுபோக்கு

பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் சல்மான் கான் – அதிர்ச்சி செய்தி

  • October 27, 2025
  • 0 Comments

பாலிவுட் நடிகர் சல்மான் கானை பயங்கரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவூட்டில் கோலோச்சி வரும் சல்மான் கான் ஒரு பயங்கரவாதி என அவருக்கு முத்திரை குத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. அண்மையில் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சல்மான்கான், இந்தி திரைப்படங்கள் சவூதியில் திரையிட்டால் பெரிய அளவில் ஹிட் அடிப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களும் பல கோடிகள் வசூலிப்பதாகவும் கூறினார். மேலும் பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற உலகின் பல […]

இலங்கை

வெலிகம பிரதேச சபை தவிசாளர் படுகொலை: ரூ. 20 லட்சம் கொலை ஒப்பந்தம் ; யார் இந்த டுபாய் லொக்கா?

  • October 27, 2025
  • 0 Comments

வெலிகம பிரதேசசபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன. குறித்த கொலை திட்டத்தை அரங்கேற்றுவதற்காக 20 லட்சம் ரூபா பேரம் பேசப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர, பிரதேச சபைக்குள் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இக்கொலை சம்பவமானது ஒட்டு மொத்த இலங்கையையும் உலுக்கியது. இது […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆதிரையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • October 27, 2025
  • 0 Comments

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி அக்டோபர் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. இம்முறை பல சர்ச்சையான போட்டியாளர்களை களமிறக்கி மக்களிடையே திட்டுவாங்கி வருகின்றது விஜய் டிவி. போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த மறந்து, சண்டை போடுவதை மட்டுமே சிறப்பாக செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு, வெளியேறிய, மகாநதி சீரியல் நடிகை ஆதிரையின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆதிரைக்கு ஒரு நாளைக்கு ரூ.12,000 முதல் 15,000 […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ஒன்லைனில் கொள்வனவு செய்யப்பட்ட பொருளால் ஏற்பட்ட விபரீதம்!

  • October 27, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 03 வயது சிறுமி ஒருவரின் தாயார்  மின்சாரத்தால் இயக்கும் சீப்பை பயன்படுத்தியமையால் தனது குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார். நார்விச்சைச் (Norwich)  சேர்ந்த 36 வயதான ஆமி (Amy) என்ற தாயார் 04 பவுண்ட்ஸுக்கு ஒன்லைனில் ஒரு சீப்பை முன்பதிவு செய்து பெற்றுக்கொண்டுள்ளார். அவருடைய மூன்று வயது குழந்தை அதனை எடுத்தபோது எதிர்பாராத விதமாக அக்குழந்தையின் தலைமுடியுடன் அவ் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரம் சிக்கிக்கொண்டது. அதனை அகற்ற முற்பட்டபோது தலைமுடி வேருடன் பிடுங்கப்பட்டதாக தயார் […]

இலங்கை

உலகில் பார்வையிட சிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த யாழ்ப்பாணம்!

  • October 27, 2025
  • 0 Comments

உலகில் 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த இடங்களுக்கான பட்டியலில் யாழ்ப்பாணம் இடம்பிடித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற பயண வழிகாட்டி இதழான ‘லோன்லி பிளானட்’ ஆஃப் அமெரிக்கா (Lonely Planet of America)  2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்களை பட்டியலிட்டுள்ளது. இதில்   யாழ்ப்பாணம், சமீப காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இடமாக மாறியுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் இந்தத் தேர்வில் முக்கியமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகவும் நம்பகமான […]

இலங்கை

நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்: உறுதிப்படுத்தியது மொட்டு கட்சி!

  • October 27, 2025
  • 0 Comments

2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்சவே வேட்பாளராக களமிறங்குவார் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. சவாலை ஏற்கக்கூடிய தலைவருக்கே நாட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள். கட்சிகளும் இத்தகைய நபரையே ஆதரிக்கும். கடந்த முறை நெருக்கடியான சூழ்நிலையிலும் […]