யாழ்.வைத்தியசாலை தீ விபத்து: பின்னணியில் சதியா?
யாழ்.போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்று அதிகாலை தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். இந்த அனர்த்தம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அனர்த்தம் எமது மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். இது […]













