வைத்தியசாலை வளாகத்தில் இருந்து சடலமாக பெண் மீட்கப்படும் காட்சி. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கள ஆய்வை மேற்கொண்டனர். இலங்கை செய்தி

காதலி சடலமாக மீட்பு – காதலனுக்கு வலை: நடந்தது என்ன?

  • June 18, 2026
  • 0 Comments

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் வாகனமொன்றிலிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர். உயிரிழந்த பெண் நேற்று (17) சடலமாக மீட்கப்படுவதற்கு முதல் நாள் (16) நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனது காதலனுடன் தங்கி இருந்துள்ளார். வெலிகம பகுதியைச் சேர்ந்த பி.ஆர். ஷியாமா தர்ஷனி (33) என்ற இப்பெண், அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார். கன்னொருவ பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் கடந்த […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்த கலகத் தடுப்பு பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம்

  • June 18, 2026
  • 0 Comments

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் மீது நீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொள்ள பிரான்ஸ் கலகத்தடுப்பு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுடன் செய்துக்கொண்ட 660 மில்லியன் பவுண்ட்ஸ் ஒப்பந்தத்தின்படி இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பிற்கு அமைய Compagnies Républicaines de Sécurité (CRS) அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸின் கலவரத் தடுப்பு அதிகாரிகள், தங்களின் பொது ஒழுங்கு அதிகாரங்களின் ஒரு பகுதியாக நீர்த்தாரை பீரங்கிகள், CS வாயு மற்றும் தடியடிகளைப் பயன்படுத்தக் கோர சுதந்திரம் பெற்றுள்ளனர் என தகவலறிந்த […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்பின் சகாக்கள் அதிருப்தி

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கிலான டாலர் பணத்தை வீணடிப்பதாகவும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், லெபனான் உட்பட அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாத […]

உலகம்

சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு நன்றி – ட்ரம்ப்

  • June 18, 2026
  • 0 Comments

ஈரானுடனான போரின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் “நடுநிலையாக” இருந்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தெஹ்ரானின் அணுசக்தி லட்சியங்களைக் கட்டுப்படுத்தும் தனது முயற்சிகளை அவர்கள் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், ஏனென்றால் அவர்கள் நிலைமையை மிகவும் சிறப்பாக மாற்றினார்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை ஈரானால் தடுக்கப்பட்ட கடல்வழி வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கான […]

தமிழக முதல்வர் விஜயை, நடிகை சமந்தா சந்தித்து வாழ்த்து கூறினார். செய்தி பொழுதுபோக்கு

முதல்வர் விஜயை குளிரவைத்த சமந்தாவின் பதிவு

  • June 18, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யை, நடிகை சமந்தா சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கத்தி, தெறி, மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடித்தவர் சமந்தா. எனினும், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரை , சமந்தா சந்திப்பது இது முதன்முறையாகும். முதலமைச்சரை சந்தித்த பிறகு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சமந்தா, மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ” நான் சென்னைக்கு வந்தபோது, […]

ஐரோப்பா

கவனத்தை திருப்பிய முதலீட்டாளர்கள் – தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எண்ணெய் விலை சரிவடைந்துள்ளமையால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் பங்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இந்நிலையில் உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை 01 சதவீதம் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 1.4% உயர்ந்து $4,316.42 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் ஒரு அவுன்ஸ் வெள்ளி 1.8 சதவீதம் உயர்ந்து $69.18 ஆக பதிவாகியுள்ளது. பிளாட்டினம் 1.2 சதவீதம் அதிகரித்து $1,757.53 ஆகவும், பல்லேடியம் 1.3 சதவீதம் உயர்ந்து $1,329.99 […]

ஐரோப்பா

UKவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தலைப்பில் விவாதம் – அணிதிரண்ட மக்கள்

  • June 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் (Tommy Robinson) கலந்துகொண்ட ஆக்ஸ்போர்டு யூனியன் நிகழ்வை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘இஸ்லாத்தின் மீது சந்தேகம் கொள்வது மேற்கத்திய நாடுகளுக்குச் சரிதான்’ என்ற தலைப்பில் விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்தே நூற்றுக்கணக்கானோர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த விவாதத்தில், ராபின்சனும், முன்னாள் நடிகர் லாரன்ஸ் ஃபாக்ஸும்  பங்கேற்க இருந்தனர். சர்ச்சைக்குரிய நிகழ்வு நடைபெறும் இடமான செயின்ட் மைக்கேல் தெருவின் […]

பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தியா செய்தி

ட்ரம்பின் பாதுகாப்பு உத்தரவாதம் கோரிய மோடி

  • June 18, 2026
  • 0 Comments

இந்திய கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தியுள்ளார். பிரான்ஸில் நடைபெற்ற G7 மாநாட்டில் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பால் இரு நாடுகள் இடையிலான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு ஜனாதிபத ட்ரம்பை , பிரதமர் மோடி […]

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேற்று நேரில் அவதானித்தார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தமிழின அழிப்பின் உறுதியான சாட்சியே செம்மணி

  • June 18, 2026
  • 0 Comments

தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். தமிழர்கள் மீது புரியப்பட்ட இந்த இனப்படுகொலையைச் சர்வதேச சமூகம் இனியாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையே இந்தப் புதைகுழியில் இருந்து மீட்டெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் உலகுக்குப் பறைசாற்றுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித […]

பனாமாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி கோலை அடித்த கானாவின் Caleb Yirenkyi வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது.... செய்தி விளையாட்டு

கடைசி நொடியில் சாதித்தது கானா அணி

  • June 18, 2026
  • 0 Comments

கனடாவின் டொராண்டோ மைதானத்தில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து Group L லீக் போட்டியில், பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில் (90+5′ நிமிடம்), கானா வீரர் கேலப் யிரென்கி Caleb Yirenkyi அடித்த அதிரடி கோல் அணியின் வெற்றியை உறுதி செய்தது. கானா ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மைதானத்தில் இந்த வெற்றியைத் துள்ளிக் […]