காதலி சடலமாக மீட்பு – காதலனுக்கு வலை: நடந்தது என்ன?
கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் வாகனமொன்றிலிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர். உயிரிழந்த பெண் நேற்று (17) சடலமாக மீட்கப்படுவதற்கு முதல் நாள் (16) நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனது காதலனுடன் தங்கி இருந்துள்ளார். வெலிகம பகுதியைச் சேர்ந்த பி.ஆர். ஷியாமா தர்ஷனி (33) என்ற இப்பெண், அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார். கன்னொருவ பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் கடந்த […]













