இலங்கை செய்தி

காதலி சடலமாக மீட்பு – காதலனுக்கு வலை: நடந்தது என்ன?

வைத்தியசாலை வளாகத்தில் இருந்து சடலமாக பெண் மீட்கப்படும் காட்சி. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கள ஆய்வை மேற்கொண்டனர்.

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் வாகனமொன்றிலிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.

உயிரிழந்த பெண் நேற்று (17) சடலமாக மீட்கப்படுவதற்கு முதல் நாள் (16) நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனது காதலனுடன் தங்கி இருந்துள்ளார்.

வெலிகம பகுதியைச் சேர்ந்த பி.ஆர். ஷியாமா தர்ஷனி (33) என்ற இப்பெண், அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.

கன்னொருவ பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் கடந்த 2026 ஜூன் 3 ஆம் திகதி முதல் நுவரெலியாவில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை அடுத்து அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அதன் பின்னர் அவரது சடலம் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

CCTV கமரா காட்சிகளின்படி, அந்தப் பெண்ணின் முகம் மூடப்பட்ட நிலையில் அவரது காதலனால் ஹோட்டலில் இருந்து வெளியே தூக்கிச் செல்லப்படுவதைக் காட்டுகின்றது.

தற்போது காதலன் தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை