புதிய அரசமைப்பு: பிரதமர் வழங்கியுள்ள உறுதிமொழி
“ புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்கின்றோம். ஆனாலும் புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவுபெற்று, இறுதி கட்டத்தில் உள்ளது எனவும் அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ அரசமைப்பு மறுசீரமைப்பைவிட, […]













