புதிய தலைவரை தெரிவு செய்யும் பணி ஜுலை 09 ஆரம்பம்
லேபர் கட்சிக்கு செப்டம்பர் மாதத்திற்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
நாட்டின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஜூலை 9 முதல் முறைப்படி தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றம் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை தாம் பதவியில் நீடிக்கப்போவதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் நாடு வலிமையான நிலையை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்ததாகப் பொறுப்பேற்பவருக்குத் தனது முழு ஆதரவை வழங்கப்போவதாகவும் உறுதியளித்துள்ளார்.




