பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி வரும் 28 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வொஷிங்டனில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாவில்லை.
மத்தியக்கிழக்கில் அதிகரித்து வருகின்ற பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் ஜெலன்ஸ்கியை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
உக்ரைனின் மேம்படுத்தப்பட்ட ட்ரோன்களை காணப்படுகின்ற நிலையில், அவற்றை அமெரிக்க பெறுவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




