அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாளை தீர்க்கமான முடிவு
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எதிரணிகள் ஆலோசனை நடத்திவருகின்றன என்று தெரியவருகின்றது.
சிங்கள வார இதழொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை எதிரணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இது தொடர்பில் எதிரணிகள் இணைந்து சபாநாயகரிடம், கையளித்த கடிதத்திற்கும் அரச தரப்பில் இருந்து உரிய பதில் வழங்கப்படவில்லை.
ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணி வசம் பெரும்பான்மை பலம் இல்லை. எனவேதான் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நாளை (23) கூடவுள்ளது. இதன்போது இது பற்றி எதிரணிகள் ஆராய்ந்து, முடிவொன்றை எடுக்கவுள்ளன என்று தெரியவருகின்றது.
எதிரணிகளின் நாடாளுமன்றக் குழு கூட்டங்களும் நாளை நடைபெறவுள்ளது. இதன்போது இது பற்றி ஆராயப்படவுள்ளது.




