14 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் பலி
உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் அதிவேகமாக ஏறி சாதனை படைத்த புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா, பாகிஸ்தானில் நடைபெற்ற மலையேற்றப் பயணத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். “புரோட் பீக் (Broad Peak) சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து நிர்மல் ‘நிம்ஸ்டாய்’ புர்ஜா (துரதிர்ஷ்டவசமாக தனது உயிரை இழந்துவிட்டார் என்பதை அளவற்ற துயரத்துடனும் உடைந்த இதயத்துடனும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அவரது மலையேற்றப் பயணத்தை ஒழுங்கமைத்த ‘எலைட் எக்ஸ்பெட்’ […]













