உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் அதிவேகமாக ஏறி சாதனை படைத்த புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா, பாகிஸ்தானில் நடைபெற்ற மலையேற்றப் பயணத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். உலகம் செய்தி

14 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் பலி

  • August 2, 2026
  • 0 Comments

உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் அதிவேகமாக ஏறி சாதனை படைத்த புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா, பாகிஸ்தானில் நடைபெற்ற மலையேற்றப் பயணத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். “புரோட் பீக் (Broad Peak) சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து நிர்மல் ‘நிம்ஸ்டாய்’ புர்ஜா (துரதிர்ஷ்டவசமாக தனது உயிரை இழந்துவிட்டார் என்பதை அளவற்ற துயரத்துடனும் உடைந்த இதயத்துடனும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அவரது மலையேற்றப் பயணத்தை ஒழுங்கமைத்த ‘எலைட் எக்ஸ்பெட்’ […]

மஹர சிறைச்சாலையில் கைதிகள் ஏற்படுத்திய கலவரம் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலையில் கைதிகள் ஏற்படுத்திய கலவரம் கட்டுப்பாட்டுக்குள்

  • August 2, 2026
  • 0 Comments

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்காக நேற்று திறந்துவைக்கப்பட்ட புனர்வாழ்வு மையத்தின் கட்டிடம் முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், புனர்வாழ்வு அலுவலகம் மற்றும் பிரதான அலுவலகம் என்பனவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைதியின்மையானது இன்று காலை வரை நீடித்தது. சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், விமானப்படையினர் […]

உலகம்

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து – 13 பேர் பலி

  • August 2, 2026
  • 0 Comments

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று நேற்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செஸ்னா கேரவன் சி-208 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம் நாஸ்கா லைன்ஸ் தொல்பொருள் தளத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. அதில் 11 பயணிகளும் 02 பணியாளர்களும் இருந்த நிலையில் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளில் இரண்டு ஜெர்மனியர்கள், இரண்டு ஸ்பானியர்கள் மற்றும் ஏழு இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக பெருவின் […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரான் போருக்கு முடிவுக்கட்ட களத்தில் இறங்கிய மத்திய கிழக்கு நாடுகள் – தயாராகும் ஒப்பந்தம்

  • August 2, 2026
  • 0 Comments

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஒன்றின் வரையறைகளை மத்தியக் கிழக்கு நாடுகள் எடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், ஐந்து மாதங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் தற்போதைக்கு புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிடப் போவதில்லை என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் தனது ட்ரூத் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், உருவாகி வரும் இந்த ஒப்பந்தம் உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை “உடனடியாக, […]

ஐரோப்பா

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – தாக்குதால்தாரி உள்பட மூவர் பலி

  • August 2, 2026
  • 0 Comments

மொஸ்கோவில் பெண் ஒருவர் கொண்டுவந்த கையால் செய்யப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறைந்தது  21 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குட்ரிங்க்ஸ்காயா (Kudrinkskaya) சதுக்கத்தில் உள்ள இத்தாலிய உணவகத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றப்போது பாதுகாப்பு ஊழியர் அவரை தடுத்ததாகவும், இதன்போதே வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும் மொஸ்கோ பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. […]

இலங்கை

மஹர சிறைச்சாலையை கண்காணிக்க பெல் விமானம் மற்றும் ட்ரோன் களமிறக்கம்

  • August 1, 2026
  • 0 Comments

மஹர சிறையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கண்காணிக்க, பெல் 412 ரக விமானமும் ட்ரோன் ஒன்றும்  களமிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தில், 7 கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றித் திரண்டுள்ளதாகவும், அவர்களிடையே  அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிக்க விமானப்படை ஒரு விமானத்தையும் […]

இலங்கை முக்கிய செய்திகள்

ராகமவில் பொலிஸ் ஊரடங்கு அமுல்

  • August 1, 2026
  • 0 Comments

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மஹர  சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐரோப்பா

குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை – பிரித்தானியாவில் அறிமுகம்

  • August 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் இந்த திட்டம் இம்மாதம் முழுவதும் தொடரும். இதற்கமைய ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலான உள்ளூர் பேருந்து சேவைகளில் இலவசமாகப் பயணிக்கலாம். கோடை விடுமுறையில் குடும்பங்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு உதவுகிறது என்று போக்குவரத்துத் துறைக்கான மாநிலச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் (Heidi Alexander) […]

பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

காட்டுத் தீயைக் கட்டுபடுத்த ஐரோப்பாவில் தீயணைப்பு ஹெலிகொப்டர்களை களமிறக்கும் ஆஸ்திரேலியா

  • August 1, 2026
  • 0 Comments

பிரான்ஸின் போர்டோக்ஸ் (Bordeaux) நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 42,000 ஹெக்டேயர்களைத் தீக்கிரையாக்கிய காட்டுத்தீ காரணமாக, இந்த வாரத்தில் சுமார் 224,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ‘எல் நினோ’ (El Niño) காரணியால் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் வெப்பம் காரணமாக, அட்லாண்டிக் கடற்கரை முதல் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி வரையிலான ஐரோப்பிய நாடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவி வருகின்றது. பிரான்ஸ் தவிர பிரித்தானியா (UK), ஸ்பெயின், ஜெர்மனி, கிரீஸ் […]

ஐரோப்பா

கீவில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் – குறைந்தது 09 பேர் உயிரிழப்பு

  • August 1, 2026
  • 0 Comments

உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில், குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நான்கு குழந்தைகள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளனர். ஷெவ்சென்கிவ்ஸ்கி (Shevchenkivskyi) மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டிடத்தின்  கீழ் தளங்கள் இடிந்து விழுந்ததாகவும், மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நகரம் முழுவதும் உள்ள கிடங்குகளில் தீ விபத்துகளை  ஏற்படுத்தி, சேதத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் […]