ஐரோப்பா

கீவில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் – குறைந்தது 09 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில், குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நான்கு குழந்தைகள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளனர்.

ஷெவ்சென்கிவ்ஸ்கி (Shevchenkivskyi) மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டிடத்தின்  கீழ் தளங்கள் இடிந்து விழுந்ததாகவும், மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் நகரம் முழுவதும் உள்ள கிடங்குகளில் தீ விபத்துகளை  ஏற்படுத்தி, சேதத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கீவில் இந்தவாரம் நடத்தப்பட்ட இரண்டாவது கொடிய தாக்குதலாக இது பதிவாகியுள்ளது. அத்துடன் நகர மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்