உலகம்

“கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது” – ட்ரம்ப்

  • August 26, 2026
  • 0 Comments

கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது  என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடா மீதான வரிவிதிப்பை தொடர்ந்து அந்நாடு பதில் நடவடிக்கையாக அமெரிக்கா மீது வரி விதித்துள்ளது. இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட ட்ரம்ப், நமக்குத் தேவையான எதுவும் அவர்களிடம் இல்லை, சரி, நம்மால் சமாளிக்க முடியும். அதாவது, ஓரிரு விஷயங்கள் சற்று சிரமத்தை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவற்றை நாம் வேறு இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இனிமேல் உங்களால் இப்படிச் செய்ய முடியாது” […]

FIFA தொடர்களைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. செய்தி விளையாட்டு

FIFA தொடர்களை புறக்கணிக்கும் முடிவை கைவிட்டது UEFA

  • August 26, 2026
  • 0 Comments

FIFA தொடர்களைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோவின் (Gianni Infantino) திட்டம் இனி ஒருபோதும் முன்னெடுக்கப்படாது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டதையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய முடிவு மொனாக்கோவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள UEFA வின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. முன்னதாக, கடும் எதிர்ப்புகள் காரணமாக இன்பான்டினோவின் திட்டம் கைவிடப்பட்ட போதிலும், […]

அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மக்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கமாட்டோம்: ஜனாதிபதி அநுர உறுதி

  • August 26, 2026
  • 0 Comments

அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்நாட்டை வளர்ச்சியடைந்த, சிறந்த நாடாக கட்டியெழுப்புவதில் வேறு எந்த சக்தியையும் விட மக்கள் […]

உலகம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் வெளியானது

  • August 26, 2026
  • 0 Comments

நேபாளத்தில் திடீரென ஏற்பட் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல்  Shishir Khanal நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். குறித்த பகுதியில் காலை 08:37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக ஏற்பட்ட பனிச்சரிவு வெள்ளப்பெருக்கை தூண்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீட்புக் குழுக்கள் இந்தத் தகவல்களை இன்னும் சரிபார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் நேபாளத்தை போலவே சீனாவும் “பெரும் சேதத்தை” சந்தித்து வருவதாக கானல் கூறியுள்ளார். நேபாளம் சீனாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக கூறிய அவர், 26 […]

உலகம்

பாலஸ்தீன  குழுவை தடை செய்தது அமெரிக்கா

  • August 26, 2026
  • 0 Comments

பாலஸ்தீன  குழுவின் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்க அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. குறித்த அமைப்பை உலகளாவிய பயங்கரவாதி என்றும் முத்திரைக் குத்தியுள்ளது. முன்னதாக பிரித்தானியா பாலஸ்தீன குழுவை பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருந்தது. அக்குழு பிரித்தானியாவில் உள்ள  இஸ்ரேலுடன் தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்களை, குறிப்பாக இஸ்ரேலின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸை, குறிவைப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் குறித்த அமைப்பை தடை செய்வது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

அறிவியல் & தொழில்நுட்பம்

29 அமெரிக்க மாநிலங்களின் குற்றச்சாட்டு – 16.68 பில்லியன் இழப்பீடு வழங்க இணக்கம்

  • August 26, 2026
  • 0 Comments

மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் Meta Platforms  நிறுவனம் அதிகபட்சமாக 16.68 பில்லியன் அமெரிக்க டொலர்களை  செலுத்தவும், ஃபேஸ்புக் Facebook மற்றும் இன்ஸ்டாகிராமில் Instagram பெரிய மாற்றங்களைச் செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளது. குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை வடிவமைத்ததாகவும், நுகர்வோரின் பாதுகாப்பு குறித்து அவர்களைத் தவறாக வழிநடத்தியதாகவும், குழந்தைகளின் தனிப்பட்ட தரவுகளை முறையற்ற முறையில் சேகரித்ததாகவும் அமெரிக்கா முழுவதும் உள்ள மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை மெட்டா எடுத்துள்ளது. இந்தத் தீர்வு, 29 அமெரிக்க […]

ஐரோப்பா

ஸ்லோவாக்கியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைத்தளக் கட்டுப்பாடு

  • August 26, 2026
  • 0 Comments

ஸ்லோவாக்கிய அரசாங்கம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது போதைப் பழக்கங்கள், சமூக அழுத்தம் மற்றும் தீவிரமயமாக்கலைத் தடுக்க உதவும் எனத் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால், சிறு குழந்தைகள் சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்குவதைத் தடைசெய்யும் மற்றும் பயனரின் வயதை நிரூபிக்கக் கோரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கான தடையை 16 வயது வரை நிர்ணயிக்கும் முடிவு, உளவியல் மற்றும் நரம்பியல் துறைகளில் […]

ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புனோல் (Buñol) நகர வீதிகளில், நாட்டின் புகழ்பெற்ற கோடைகாலக் கொண்டாட்டமான 'லா தொமத்தினா' (La Tomatina) தக்காளித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் தக்காளி திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • August 26, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புனோல் (Buñol) நகர வீதிகளில், நாட்டின் புகழ்பெற்ற கோடைகாலக் கொண்டாட்டமான ‘லா தொமத்தினா’ (La Tomatina) தக்காளித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். புதன்கிழமை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில், லொறிகள் மூலம் கொண்டுவரப்பட்ட சுமார் 165 தொன் பழுத்த தக்காளிகள் மக்கள் கூட்டத்தை நோக்கி வீசப்பட்டன. வெண்நிற ஆடைகளை அணிந்திருந்த மக்கள், பின்னணியில் ஒலித்த பாப் இசைக்கு ஏற்ப ஒருவர் மீது ஒருவர் […]

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உருக்குலைந்துள்ள நேபாளத்திற்கு உதவ இந்திய போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்தியா உலகம் செய்தி

நேபாளம் விரையும் இந்திய போர் விமானங்கள்

  • August 26, 2026
  • 0 Comments

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உருக்குலைந்துள்ள நேபாளத்திற்கு உதவ இந்திய போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். 105க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். நேபாள பிரதமர் உடன் பேசிய ந பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளதுடன் தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நேபாளத்திற்கு மீட்புப் பணிகளில் உதவி செய்யும் வகையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான […]

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். செய்தி

அச்சம் வேண்டாம்: தாயகம் திரும்புங்கள்! இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு அழைப்பு!!

  • August 26, 2026
  • 0 Comments

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க […]