ஐரோப்பா

ரஷ்யாவின்  அமூர் இரசாய வளாகத்தில் தீ விபத்து – 06 சீனர்கள் பலி

  • August 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவின்  அமூர் பகுதியில் உள்ள எரிவாயு இரசாயன வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 சீன பிரஜைகள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 152 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளதுடன், அவர்களில் 36 பேர் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அவசர விமான சேவை ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.      

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும். இச்சமரில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து, மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“22” ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் தோற்கடிப்பார்கள்: கூட்டு எதிரணி

  • August 26, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும். இச்சமரில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து, மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்பட்டால் மக்கள் நிச்சயம் அதனைத் தோற்கடிப்பார்கள். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் திட்டமிடவில்லை. ஏனெனில், தேர்தலை நடத்தினால் நிச்சயம் தோல்வியடைவோம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக, […]

கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று தலைமன்னாரில் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

மனைவி குத்திக் கொலை: கணவன் கைது: தலைமன்னாரில் பயங்கரம்

  • August 26, 2026
  • 0 Comments

கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று தலைமன்னாரில் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார். தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரிய இராணுவத்துடன் இணைவு: குர்திஷ் தலைமையிலான SDF படை கலைப்பு உலகம் செய்தி மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

சிரிய இராணுவத்துடன் இணைவு: குர்திஷ் தலைமையிலான SDF படை கலைப்பு

  • August 26, 2026
  • 0 Comments

சிரியாவின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான அரசாங்கத்துடன் எட்டப்பட்ட ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, குர்திஷ் தலைமையிலான ‘சிரிய ஜனநாயகப் படைகள்’ (SDF) கலைக்கப்படுவதாக அதன் தலைவர் மஸ்லூம் அப்தி (Mazloum Abdi) அறிவித்துள்ளார். சிரியாவில் ஐஎஸ்ஐஎல் (ISIS) பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான போரில் முன்னின்று செயல்பட்ட SDF அமைப்பு, சிரிய இராணுவத்துடன் முழுமையாக இணைக்கப்பட்டு விட்டதாக டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதிமாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்தி உறுதிப்படுத்தினார். சிரியாவின் வடகிழக்கு […]

At least 15 newborns killed in Pakistan hospital fire உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் வைத்தியசாலையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி

  • August 26, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 15 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் நடந்த போது பிம்ஸ் (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் (nursery) 16 குழந்தைகள் இருந்ததாக மருத்துவமனை அதிகாரிகளை மேற்கோள் காட்டி Geo News புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் இருந்த ஏர் Air […]

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். இலங்கை செய்தி

ஏழை மக்களின் நிதியை கொள்ளையடித்த பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

  • August 26, 2026
  • 0 Comments

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வசும பிரிவுக்குப் பொறுப்பாக செயற்பட்ட ஹட்டன்-டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணொருவரும், ஹட்டன்-டிக்கோயா காபெக்ஸ் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் […]

'செஸ்' உலகின் ஐந்து முறை உலக சாம்பியனான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் 15 வயது சிறுவன் வந்தன் அலங்கார் சவாய் Vandan Alankar Sawai, 50 நகர்த்தல்களில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தியா செய்தி விளையாட்டு

உலக சாம்பியனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்

  • August 26, 2026
  • 0 Comments

‘செஸ்’ உலகின் ஐந்து முறை உலக சாம்பியனான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் 15 வயது சிறுவன் வந்தன் அலங்கார் சவாய் Vandan Alankar Sawai, 50 நகர்த்தல்களில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். Chess.com இணையதளம் நடத்திய Titled Tuesday தொடரின் இரண்டாவது சுற்றில் இப்போட்டி நடைபெற்றது. வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய வந்தன் (தரவரிசை: 2,288), உலகின் முன்னணி வீரரான கார்ல்சனை (தரவரிசை: 2,823) எதிர்கொண்டார். இப்போட்டி குறித்துப் பேசிய வந்தன், “இழப்பதற்கு எதுவுமில்லை, […]

புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி பொழுதுபோக்கு

பாடலால் உலகை வென்ற Dolly Parton மறைந்தார்: சோகத்தில் இசையுலகம்

  • August 26, 2026
  • 0 Comments

புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் நாஷ்வில்லில் (Nashville) அமைதியான முறையில் உயிரிழந்துள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் “புற்றுநோயுடன் குறுகிய காலம் போராடி இறந்தார்” என்று அவரது பிரதிநிதிகளை மேற்கோள் காட்டி  People இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தென்மாநில […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், ஹோமுஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாகத் தன் அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஹோர்முஸ் நீரிணை நிர்வகிப்பு: ஈரான், ஓமான் பேச்சு

  • August 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாகத் தன் அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் போர் தொடங்குவதற்கு முன்னர் வரை, உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்தைக் கையாண்ட இந்த முக்கிய கடல்வழிப் பாதையில், கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஈரானும் ஓமானும் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியற்ற […]

மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்றும், அதனை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு: ஆளுங்கட்சி கூறுவது என்ன?

  • August 26, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்றும், அதனை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: “மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே […]