இந்தியா செய்தி

அமெரிக்காவிடமிருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்குகிறது இந்தியா

அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது என தெரியவருகின்றது.

அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது என தெரியவருகின்றது.

இந்தியா – அமெரிக்கா இடையி​லான பாது​காப்பு உறவு​களை வலுப்​படுத்​தும் வித​மாக அமெரிக்​கா​விடம் இருந்து ஏவுகணைகள், துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​களை​யும், ராணுவ தளவாடங்​களை​யும் இந்தியா கொள்​முதல் செய்து வரு​கிறது.

இதற்கமைய அமெரிக்​கா​வில் தயாரிக்​கப்​பட்ட ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவு​கணை அமைப்பை இந்​தியா கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்​ள​தாக இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரி​வித்​துள்​ளார்.

அவர் எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதி​வில்​,”​போர்க்​களத்​தில் சோதிக்​கப்​பட்ட ‘எப்​ஜிஎம்​-148 ஜாவலின்’ என்று அழைக்​கப்​படும் பீரங்கி எதிர்ப்பு அமைப்பை இந்​தியா வாங்க திட்​ட​மிட்​டுள்​ளது.

தோளில் சுமந்து ஏவக்​கூடிய இந்த ஏவு​கணை அமைப்​பில் தானியங்கி வழி​காட்​டும் முறை உள்​ளது. இதன் மூலம் ஏவு​கணை ஏவப்​பட்ட பிறகும் தன் இலக்​கைத் தானாகவே பின்​தொடர்ந்து தாக்​கும்.

இதனால் அதை ஏவிய வீரர் உடனடி​யாக மறை​விடத்​துக்​குச் சென்று, எதிரி​யின் பதில்​தாக்​குதலில் இருந்து தப்​பிக்க முடி​யும். இந்த ஏவு​கணை, பீரங்​கி​யின் மேற்​பகு​தி​யில் உள்ள, வீரர்​கள் உள்ளே நுழை​யும் ஹாட்ச் பகு​தியை தாக்​கு​கிறது. இது ஏவப்பட்டதிலிருந்து இலக்​கைத் தாக்​கும் வரை, ‘U’ வடிவப் பாதையில் பறந்​து சென்​று, துல்​லிய​மாக இலக்​கை ​தாக்​கும் எனக் கூறப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி