பாலஸ்தீன குழுவை தடை செய்தது அமெரிக்கா
பாலஸ்தீன குழுவின் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்க அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
குறித்த அமைப்பை உலகளாவிய பயங்கரவாதி என்றும் முத்திரைக் குத்தியுள்ளது.
முன்னதாக பிரித்தானியா பாலஸ்தீன குழுவை பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருந்தது.
அக்குழு பிரித்தானியாவில் உள்ள இஸ்ரேலுடன் தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்களை, குறிப்பாக இஸ்ரேலின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸை, குறிவைப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த அமைப்பை தடை செய்வது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




