காசாவில் தண்ணீர் பஞ்சம்: லட்சக்கணக்கானோர் பரிதவிப்பு
காசா பகுதி முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை பேணத் தேவையான வசதிகள் இன்றித் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. காசாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதியிற்கும் மேற்பட்டோர், அதாவது 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், குடிப்பதற்கும் , சமைப்பதற்கும் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 6 லிட்டருக்கும் (1.6 கேலன்) குறைவான நீரையே பெற முடிகிறது. அவசரகாலச் சூழல்களில் குடிப்பது, கழுவுவது மற்றும் […]













