இலங்கை

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

  • July 23, 2026
  • 0 Comments

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

உலகம்

செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

  • July 23, 2026
  • 0 Comments

செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராகிலிருந்து (Prague)  180 கி.மீ (112 மைல்கள்) தென்கிழக்கில் உள்ள நமெஸ்ட் நாட் (Namest nad ) ஒஸ்லாவோவில் (Oslavou)  உள்ள ராணுவத் தளத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் மூன்று பேர்  மிதமான காயங்களுடன் ப்ர்னோவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், லேசான காயங்களுடன் ஒருவர் ஜிஹ்லாவாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இராணுவம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள […]

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தளபதிகள், மற்றும் ராணுவ ஆலோசகர்களை ஈரான் ,யேமனுக்கு அனுப்பிவைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் தளபதிகள் யேமன் விரைவு: ஆயுதங்களும் அனுப்பி வைப்பு: பின்னணி என்ன?

  • July 23, 2026
  • 0 Comments

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தளபதிகள், மற்றும் ராணுவ ஆலோசகர்களை ஈரான் ,யேமனுக்கு அனுப்பிவைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணை, ட்ரோன் சார்ந்த தளவாடப் பொருட்களையும் கடந்த ஜுலை 13 ஆம் திகதி விமானம் மூலம் யேமனுக்கு ஈரான் அனுப்பியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிய வட்டாரங்கள், யேமனின் செய்தித்துறை அமைச்சர் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஒருவர் ஆகியோர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு இதுகுறித்த விவரங்களை வழங்கியுள்ளனர். ஹவுதி அமைப்பினரைப் பலப்படுத்துவதற்கு ஈரான் மேற்கொண்டு […]

உலகம் முக்கிய செய்திகள்

100 டொலரை எட்டியது கச்சா எண்ணெய் விலை

  • July 23, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல், உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த அச்சங்களை மீண்டும் தூண்டியதால், மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டொலரை எட்டியுள்ளது. அமெரிக்கா ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதால், பல நாட்களாக அதிகரித்து வந்த எண்ணெய் விலையானது இன்றைய தினம் உச்சத்தை தொட்டுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் 05 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. செங்கடலில் ஹூதி போராளிகள் எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதைத் தொடர்ந்தே […]

ஐரோப்பா

கனடா தலைமையிலான வங்கியில் சேர பிரித்தானியாவின் புதிய நிதிமைச்சர் ஜான் ஹீலி முனைப்பு

  • July 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சரான ஜான் ஹீலி (John Healey), பாதுகாப்புத் திட்டங்களுக்கு மலிவான நிதியுதவியைப் பெறுவதற்காக, கனடா தலைமையிலான உலகளாவிய வங்கித் திட்டத்தில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஜான் ஹீலி பாதுகாப்புத் துறைக்குக் கூடுதலாக £18 பில்லியன் பவுண்ட்ஸை திரட்டும் சவாலை எதிர்கொள்கிறார். ஆகவே கனடா தலைமையிலான பாதுகாப்பு வங்கியில் சேர முனைப்புக் காட்டி வருகிறார். இதற்கு முன்னாள் டோரி பாதுகாப்புச் செயலாளர்களான சர் கேவின் வில்லியம்சன் (Sir Gavin Williamson ) […]

அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் கூறுகிறார். உலகம் செய்தி

“அமெரிக்க-சவுதி அணுசக்தி ஒப்பந்தம் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்”

  • July 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் கூறுகிறார். இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, மத்திய கிழக்கில் ஒரு புதிய அணு ஆயுதப் போட்டி உருவாகும் என்பது குறித்த கவலைகள் இஸ்ரேலில் எழத் தொடங்கின. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சவூதி அரேபியா அமெரிக்க தொழில்நுட்பத்தின் உதவியுடன் அணு உலைகளைக் கட்டவும் யுரேனியத்தைச் செறிவூட்டவும் அனுமதிக்கப்படும். இந்த ஒப்பந்தம், சவூதி அரேபியா அமைதியான நோக்கங்களுக்காக […]

உலகம்

“முதலில் அமைதி” – வடகொரியாவுடன் உறவை புதுப்பிக்க தென்கொரியா முனைப்பு

  • July 23, 2026
  • 0 Comments

வட கொரியாவுடனான உறவில், ‘முதலில் அணு ஆயுத ஒழிப்பு’ என்ற கொள்கையைக் கைவிட்டு, ‘முதலில் அமைதி’ என்ற அணுகுமுறையை தென் கொரியா பின்பற்றுவதாக ஒருங்கிணைப்பு அமைச்சர் சுங் டோங்-யங் (Chung Dong-young)   தெரிவித்துள்ளார். அதே சமயம் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்றதாக மாற்றும் இறுதி இலக்கை அந்நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அணு ஆயுத ஒழிப்பு என்ற இறுதி […]

ஜனநாயகத்துக்காக ரணில், சஜித் சங்கமம்: எதிரணி தலைவர்களும் ஒன்றிணைவு செய்தி

ஜனநாயகத்துக்காக ரணில், சஜித் சங்கமம்: எதிரணி தலைவர்களும் ஒன்றிணைவு

  • July 23, 2026
  • 0 Comments

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து தோற்கடிப்போம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரதான எதிர்க்கட்சிகள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (23) விசேட கூட்டம் ஒன்றை நடத்தின. இதன்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார். “ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே எதிரணிகள் அனைத்தும் இன்று ஒன்றுபட்டுள்ளன. […]

உலகம்

வர்ஜீனியாவில் அவசரநிலை பிறப்பிப்பு – பாதுகாப்பு படையினர் களமிறக்கம்

  • July 23, 2026
  • 0 Comments

வர்ஜீனியாவின் 55 மாவட்டங்களில் கடும் மழை பெய்துள்ளதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளும் வணிக நிறுவனங்களும் நீரில் மூழ்கின. அத்துடன் பாலங்கள் உடைந்ததுடன், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலை காரணமாக ஆளுநர் பேட்ரிக் மோரிசி (Patrick Morrisey) அவசரநிலையை பிறப்பித்தார். அத்துடன் 100 தேசிய பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்தியுள்ளார். அதே நேரத்தில், தேசிய வானிலை ஆய்வு மையம் உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் குறித்து அவசர […]

இலங்கை

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இரண்டு இடங்கள் முன்னேறிய இலங்கை

  • July 23, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 94வது இடத்திற்கு முன்னேறி, சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த தரவரிசையைப் பதிவு செய்துள்ளது. தரவரிசையின்படி, 2025 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 96வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது. அதேநேரம்  கடந்த 2021 ஆம் ஆண்டில்,   107வது இடத்திலும், 2022 இல் 102வது இடத்திலும், 2023இல்  100வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த தரவரிசையில், சிங்கப்பூர் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்டுள்ள […]