ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இரண்டு இடங்கள் முன்னேறிய இலங்கை
2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 94வது இடத்திற்கு முன்னேறி, சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த தரவரிசையைப் பதிவு செய்துள்ளது.
தரவரிசையின்படி, 2025 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 96வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
அதேநேரம் கடந்த 2021 ஆம் ஆண்டில், 107வது இடத்திலும், 2022 இல் 102வது இடத்திலும், 2023இல் 100வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் இந்த தரவரிசையில், சிங்கப்பூர் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்டுள்ள நாடாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்நாடு முதலாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தான் 104வது இடத்துடன் தரவரிசையின் கடைசி இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஹென்லி கடவுச்சீட்டு குறியீடானது, கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன் விசா பெறாமல் சென்றடையக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கடவுச்சீட்டுகளைத் தரவரிசைப்படுத்துகிறது.




