உலகம் முக்கிய செய்திகள்

100 டொலரை எட்டியது கச்சா எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல், உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த அச்சங்களை மீண்டும் தூண்டியதால், மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டொலரை எட்டியுள்ளது.

அமெரிக்கா ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதால், பல நாட்களாக அதிகரித்து வந்த எண்ணெய் விலையானது இன்றைய தினம் உச்சத்தை தொட்டுள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய் 05 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

செங்கடலில் ஹூதி போராளிகள் எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதைத் தொடர்ந்தே விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக எரிவாயு விலைகளும் சீராக உயர்ந்து வருகின்றன. ஜூன் 26 அன்று ஒரு தெர்ம் சுமார் 98 பென்ஸாக இருந்த நிலையில், தற்போது இங்கிலாந்தின் அளவுகோல் எரிவாயு விலை ஒரு தெர்ம் சுமார் 150 பென்ஸாக அதிகரித்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,