100 டொலரை எட்டியது கச்சா எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல், உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த அச்சங்களை மீண்டும் தூண்டியதால், மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டொலரை எட்டியுள்ளது.
அமெரிக்கா ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதால், பல நாட்களாக அதிகரித்து வந்த எண்ணெய் விலையானது இன்றைய தினம் உச்சத்தை தொட்டுள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் 05 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
செங்கடலில் ஹூதி போராளிகள் எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதைத் தொடர்ந்தே விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக எரிவாயு விலைகளும் சீராக உயர்ந்து வருகின்றன. ஜூன் 26 அன்று ஒரு தெர்ம் சுமார் 98 பென்ஸாக இருந்த நிலையில், தற்போது இங்கிலாந்தின் அளவுகோல் எரிவாயு விலை ஒரு தெர்ம் சுமார் 150 பென்ஸாக அதிகரித்துள்ளது.




