நெடுநாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி நெடுந்தீவில் போராட்டம்!
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி இன்று (24) மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர். மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை. குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை […]













