லித்துவேனிய வான்வெளிக்குள் நுழைந்த மர்ம ட்ரோன் – நேட்டோ படையினரால் அழிப்பு
லித்துவேனிய வான்வெளிக்குள் நுழைந்த ட்ரோன் ஒன்றை நேட்டோ படையினர் இன்று மாலை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அந்த ட்ரோன் அண்டை நாடான பெலாரஸிலிருந்து நாட்டிற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும், உடனடியாக செயற்பட்ட நேட்டோ படையினர் 30 நிமிடங்களில் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லித்துவேனியப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் ட்ரோன் இதுவாகும்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி, கூட்டணிப் படையினரின் விரைவான பதிலுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்றார்.
உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், இத்தகைய தயார்நிலை நமது பிராந்தியத்திற்கு மிகவும் இன்றியமையாதது எனக் கூறிய அவர், நமது நேட்டோ கூட்டாளிகளுடன் இணைந்து, லிதுவேனியா தனது வான்வெளியைப் பாதுகாக்கும் என்றார்.




