போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு!
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா அந்தப் பகுதியில் தடையை விதித்துள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஈரான் இன்னும் தனது எதிர்ப்பைத் தீவிரமாகத் தொடங்கவில்லை என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




