வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்

  • August 24, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி சுஜீவா சிவதாஸ் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவிக்கான புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் […]

பிரித்தானிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக Andy Burnham, உக்ரைன் தலைநகர் கிவ் (Kyiv) நகருக்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கின்றார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய பிரதமர் Andy Burnham முதல் வெளிநாட்டு பயணமாக உக்ரைன் விஜயம்

  • August 24, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக Andy Burnham, உக்ரைன் தலைநகர்  கிவ் (Kyiv) நகருக்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கின்றார். உக்ரைனின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், அந்நாட்டிற்கான பிரித்தானியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளார். முன்னாள் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் காலத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளால் உருவாக்கப்பட்ட “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி” (Coalition of the Willing) அமைப்பின் முதல் கூட்டத்திற்குப் பிரதமர் Andy Burnham தலைமை தாங்குவார். […]

யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு' அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை தீவிரம்

  • August 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ‘சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு’ அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு குறித்தும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு ஆளுநர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. […]

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பார் என “சண்டே டைம்ஸ்'' ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் அவசர இலங்கை விஜயத்தின் பின்னணி என்ன?

  • August 24, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பார் என “சண்டே டைம்ஸ்” ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள தனது முதல் பயணத்தின் போது, ​​ ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை வகிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் […]

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இலங்கை செய்தி

ஐ.நா. கூட்டத்தொடர் செப்டம்பர் 22 ஆரம்பம்: இலங்கை சார்பில் விஜித ஹேரத் பங்கேற்பு

  • August 23, 2026
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஐ.நா. பொதுச்சபையின் 81-ஆவது அமர்வின் உயர்மட்ட விவாதம் செப்டம்பர் 22 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதில் கலந்துகொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் சார்பில் […]

ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei எச்சரித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘பொருளாதார இலக்குகளைத் தாக்குவோம்’ – அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

  • August 23, 2026
  • 0 Comments

ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கான புதிய அமெரிக்க முயற்சிகளில் இணைய வேண்டாம் என அதன் அண்டை நாடுகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரான மொஹ்சன் ரெசாய் கடுமையாக Mohsen Rezaei எச்சரித்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை தனது “புதிய நிலப்பரப்பு” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வணிக நலன்களுக்கு எதிராகவும் ஈரான் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாதப் போக்கு […]

கனடா மீதான அமெரிக்காவின் புதிய வரியானது , எம்மை திட்டமிட்ட அடிப்படையில் பிரித்து காயப்படுத்துவதற்கான ஒரு "தவறான கணக்கீடு” என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

திட்டமிட்டு காயப்படுத்தும் செயல்: வரிப்போர் குறித்து கனடா பிரதமர் அதிருப்தி

  • August 23, 2026
  • 0 Comments

கனடா மீதான அமெரிக்காவின் புதிய வரியானது , எம்மை திட்டமிட்ட அடிப்படையில் பிரித்து காயப்படுத்துவதற்கான ஒரு “தவறான கணக்கீடு” என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை காலை கனடிய மக்களுக்கு ஆற்றிய உரையில், “அவர்கள் மிக அதிகமாகக் கேட்டார்கள்; ஆனால் மிகக் குறைவாகவே வழங்கினார்கள்” என்று கனடா பிரதமர் கார்னி குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவின் கடுமையான புதிய வரிகளைத் தொடர்ந்து, நாடு தற்போது ஒரு வர்த்தக “போரில்” ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் 8 […]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு: பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

  • August 23, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமரை, நிகழ்வு நிறைவடைந்த பின்னர் வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர். […]

பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு அழைப்பாணை: பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு இந்தியா செய்தி

பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு அழைப்பாணை: பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு

  • August 22, 2026
  • 0 Comments

2025-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர் ஹபிஸ் சயீதுக்கு Hafiz Saeed நீதிமன்ற அழைப்பாணையை (Summons) ராஜதந்திர வழிகள் மூலம் இஸ்லாமாபாத்திற்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம்சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு கருத்தை முன்வைக்க போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய இந்த நடவடிக்கை மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. அடுத்த கட்டமாக […]

"எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சி முறையின் கீழ் சர்வாதிகாரத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்க முயல்கிறதா?" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கிறதா அநுர அரசு? எதிரணி கேள்வி

  • August 22, 2026
  • 0 Comments

“எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சி முறையின் கீழ் சர்வாதிகாரத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்க முயல்கிறதா?” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு மகா சங்கத்தினர், சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் எனப் பல தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் வழங்கிய […]