அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்குத் தடையா? சிஐடியில் முறைப்பாடு!

  • May 26, 2026
  • 0 Comments

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என வெளியாகும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது. இதன்போது வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களை செய்வதற்கும் அம்மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு – […]

இலங்கை செய்தி

‘படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும்’ – யாழில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை!

  • May 26, 2026
  • 0 Comments

பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார். வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (26.05.2026) செவ்வாய்க்கிழமை […]

அரசியல் இலங்கை செய்தி

விரைவில் மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு , “தேர்தலுக்கான நிதி […]

இலங்கை செய்தி

வடக்கில் விரைவில் காணி விடுவிப்பு?

  • May 26, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமுள்ள நிலங்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து, பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை வட பகுதிக்கு நேரில் வருகை தந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஜயத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக விடுவிக்கப்படவுள்ள முக்கிய நிலப்பரப்புகள் குறித்த விவரங்கள் வருமாறு:- பாதுகாப்புப் படையினரின் இன்றைய […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!

  • May 26, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் விஜய், நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றார். பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களை சந்திக்கும் நோக்கிலேயே அவரது டெல்லி வியம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேச்சு நடத்துவார் என தெரியவருகின்றது. இந்த சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் தமிழக முதல்வர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

உலகம் செய்தி

இஸ்ரேல் வேரோடு அழிக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் சபதம்!

  • May 26, 2026
  • 0 Comments

இஸ்ரேலை பிராந்தியத்தின் ஆபத்தான புற்றுநோய் என்று குறிப்பிட்டுள்ள ஈரானின் உச்ச தலைவர் Mojtaba Khamenei, அந்த நாடு எதிர்காலத்தில் வேரோடு அழிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஹஜ் மற்றும் ஈத் அல்-அதா பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு சூளுரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவது இந்த ஆண்டு இஸ்லாமிய சமூகத்தின் முக்கிய கடமையாக இருக்கும் என்று Mojtaba Khamenei குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்லாமிய நாகரிகமே உலகை ஆளும் என்றும், எதிரிகளுக்கு எதிராக ஈரான் […]

உலகம் செய்தி

பிஜியில் புதிய துறைமுகம்: ‘குவாட்’ நாடுகள் அதிரடி வியூகம்!

  • May 26, 2026
  • 0 Comments

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பிஜியில் (Fiji) கூட்டாக புதிய துறைமுகத்தை உருவாக்குவதற்கும், முக்கியத் தாதுக்கள் (Critical Minerals) மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ‘குவாட்’ (Quad) நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் புதுடெல்லியில் நடத்திய சந்திப்பில் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். மேற்படி நான்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, கடந்த 2024 செப்டம்பருக்குப் பிறகு நடைபெற்ற மூன்றாவது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் […]

செய்தி

இலங்கையிலேயே முதன்முறையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ வடக்கில் அறிமுகம்!

  • May 26, 2026
  • 0 Comments

முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (One-Stop Investment Portal – OSSI) வடக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று செவ்வாய்க்கிழமை (26.05.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (NIS-26) இன் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலேயே இந்த ‘ஒருவழி […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

எம்எல்ஏக்களின் தாவல்களால் தடுமாறும் அதிமுக!

  • May 26, 2026
  • 0 Comments

அதிமுகவில் உள்ளக மோதல் உக்கிரமடைந்துள்ளது. ஏற்கனவே மூன்று எம்எல்ஏக்கள் பதவி விலகியுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா என்பவரே இவ்வாறு பதவி விலகியுள்ளார். அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், அதிலுள்ள பலர் தவெகவை நோக்கி படையெடுக்கின்றனர். சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியா திரும்பிய ‘IS’ குடும்பங்கள்: சட்டம் பாயும் என எச்சரிக்கை!

  • May 26, 2026
  • 0 Comments

IS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய மற்றுமொரு குழுவினர் மெல்போர்ன் விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளனர். சிரியாவின் வடபகுதியில் உள்ள அல்-ரோஜ் (Al-Roj) முகாமில் இருந்து கடந்த வாரம் புறப்பட்ட இக்குழுவினர், கத்தாரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை இன்று வந்தடைந்தனர். ‘ஐஎஸ் மணப்பெண்கள்’ என்று அழைக்கப்படும் இரு பெண்களும், அண்மையில் 18 வயதை எட்டிய ஓர் இளைஞனும், அவர்களின் ஏழு குழந்தைகளுமே இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். அதேவேளை, சிரிய முகாமில் இருந்து […]