முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது: பின்னணி என்ன?
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் முறையற்ற கடற்படை நியமனம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரமே அவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொள்வதற்காக, நிறைவேற்று அதிகாரிகளுக்கான நிலையான ஆட்சேர்ப்பு தகைமைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த விசாரணை முக்கியமாக கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன், பிரித்தானிய ராயல் […]













