அரசியல் இலங்கை செய்தி

நாமலின் அரசியல் பயணத்தை முடக்க சதியா?

“நாமல் ராஜபக்ச என்பவர் மஹிந்தவின் மகன், எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரின் அரசியல் பயணத்தை ஒடுக்கிவிடமுடியாது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சூளுரைத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக கூறியவை வருமாறு ,

“ அடக்குமுறைக்காகவே தமது கட்சி உறுப்பினர்களான இருவரை சிஐடி மற்றும் பொலிசுக்கு ஜனாதிபதி நியமித்தார். ஏனெனில் நாமல் ராஜபக்சதான் தமக்குரிய சவால் என்பது அவர்களுக்கு தெரியும்.

எனவே, நாமலுக்கான ஆதரவை தடுக்க முற்படுகின்றனர்.அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர். நாமல் ராஜபக்ச என்பவர், மஹிந்த ராஜபக்சவின் மகன்.

எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரை அடிபணிய வைக்க முடியாது. நாம் நீதிமன்றத்தை நம்புகின்றோம். ஆனால் நீதிமன்றத்துக்கு தகவல்களை அறிக்கையிடும் தேசிய மக்கள் சக்தி பொலிஸார்மீது நம்பிக்கை இல்லை.” – என்றார் டிவி சானக.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை