இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

இலங்கையில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பை உறுதி செய்தல், பொது ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அவசர நிலை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர கால சட்டத்தை நீடிப்பதற்குரிய யோசனை இவ்வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அனுமதி பெறப்படும். பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறுவதற்கு […]

உலகம்

அகதி தஞ்சம் கோருவோருக்கு பிரிட்டன் கதவடைப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களுக்கு தற்காலிகமாக மட்டுமே புகலிடம் வழங்குவதற்குரிய கொள்கைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் Home Secretary Shabana Mahmood இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. உத்தேச முன்மொழிவுக்கமைய அகதிகளுக்கு இனி நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாமல், தற்காலிகமாகவே அதற்குரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 30 மாதங்களுக்கு ஒருமுறை தற்காலிக குடியுரிமை மீளாய்வுக்குட்படுத்தப்படும். சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே குடியேற்ற சட்டங்களை கடுமையாக்குவதற்குரிய இந்த நகர்வை பிரிட்டன் முன்னெடுக்கின்றது. எனினும், புதிய நடைமுறையானது அகதிகளின் […]

இலங்கை செய்தி

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்து!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் சிக்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். அனுராதபுரம், ரன்கெத்தகம பகுதியில் இன்று (2) மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதுகெலும்பாகத் திகழும் பல இலட்சம் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு மூண்டுள்ள […]

இலங்கை செய்தி

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

  • March 2, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை – வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜதுர்சன் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்று திங்கட்கிழமை காலை, அந்த வீட்டின் பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று […]

அரசியல் இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் சூழல்: சஜித் தலைமையில் நாளை விசேட கூட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமே சஜித் பிரேமதாசவால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (03) இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. மேற்படி […]

இந்தியா

மத்திய கிழக்கு போர்: புருவத்தை உயர்த்தியது டெல்லி!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர்: புருவத்தை உயர்த்தியது டெல்லி! மத்திய கிழக்கின் தற்போதைய போர் சூழ்நிலை கவலை அளிக்கின்றது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கனடா பிரதமருடன் இணைந்து டெல்லியில் இன்று ஊடக சந்திப்பை நடத்தினார். இதன்போது மத்திய கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் மோதல் குறித்த பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘‘இத்தகைய பிரச்சினைகளுக்கு, பேச்சு மற்றும் தூதரக முயற்சிகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் […]

உலகம்

அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான் திட்டவட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

“ அமெரிக்காவுடன் ஈரான் பேச்சு நடத்தாது. தன்னைதானே தற்காத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது.”என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையின்தலைவர் அலி லாரிஜானி Ali Larijani தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கம் ஊடாகவே அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘‘டொனால்ட் ட்ரம்ப் தனது தவறான நம்பிக்கைகளால் பிராந்தியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க துருப்புக்களுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க படையினர் மற்றும் குடும்பங்கள் மீது சுமத்துகிறார். […]

உலகம்

அமெரிக்காவுக்கு ஆதரவாக 3 ஐரோப்பிய நாடுகள் களத்தில்!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான் நடத்திவரும் ஏவகணைத் தாக்குதல்களை பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. மேற்படிதாக்குதல்கள் நியாயமற்றவை எனக் குறிப்பிட்டுள்ள ஐரோப்பியத் தலைவர்கள், பிராந்தியத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பில் மூன்று ஐரோப்பிய நாடுகளும் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. பிரிட்டன் பிரதமர் தனது நாட்டின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன், கட்டாரை நோக்கி பாய்ந்த ஈரானின் ஏவகணையொன்றை பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.

உலகம்

லெபனான்மீதும் கை வைத்தது இஸ்ரேல்: தாக்குதலில் பலர் பலி!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான்மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல் Israel தற்போது லெபனான்மீதும் Lebanon தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் செயல்படுகின்றது. அவ்வமைப்பு ஈரான் ஆதரவு பெற்ற ஆயதபடையென கருதப்படுகின்றது. இந்நிலையில் மேற்படி தாக்குதலில் குறைந்தபட்சம் 31 பேர் பலியாகியுள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள்மீதான தாக்குதல் […]

இலங்கை செய்தி

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அரசு விளக்கம்!

  • March 2, 2026
  • 0 Comments

நாட்டில் தேவையானளவு எரிபொருள் உள்ளது. எனவே, தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ளவேண்டாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (2) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்கண்டவாறு கூறினார். “ நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வீண் அச்சத்தால் மக்கள் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வாறு அச்சம் கொள்ள தேவை இல்லை. தேவையானளவு எரிபொருள் இருப்பில் உள்ளது. எமது கப்பல்கள் மத்திய கிழக்கு […]

error: Content is protected !!