ஐரோப்பா செய்தி

‘இவரே சிறந்த தலைவர்’ – Keir Starmer ஐ புகழும் ஐரோப்பிய தலைவர்கள்

டென்மார்க், கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டின் போது பிரதமர் கீர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் உயர் பிரதிநிதி காஜா காலாஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். (அக்டோபர் 2, 2025).

பிரித்தானிய பிரதமர் Keir Starmer உள்நாட்டில் விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், முந்தைய பிரதமர்களை விட இவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்ததாக ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாது என்பதில் ஸ்டார்மர் உறுதியாக இருந்தாலும், பிரெக்சிட் தாக்கங்களுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளுடனான உறவை மேம்படுத்த அவர் கடுமையாக உழைத்தார்.

மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி ஜனாதிபதி பிரெடெரிக் மெர்ஸ் ஆகிய ‘E3’ கூட்டணிக் தலைவர்களுடன் இணைந்து, உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ராணுவ ரீதியான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதில் Keir Starmer முக்கியப் பங்கு வகித்தார்.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் X தளத்தில் விடுத்துள்ள பதிவில்,

“பல தலைவர்கள் ஒரு சிறந்த ராஜதந்திரியாக உருவெடுக்கப் பல ஆண்டுகள் ஆகும், ஆனால் நீங்கள் வெறும் இரண்டு ஆண்டுகளில் அதனைச் சாதித்துக் காட்டியுள்ளீர்கள்.

உங்களால் ஐரோப்பிய மற்றும் உக்ரைனின் பாதுகாப்பு பலமடைந்துள்ளது. நன்றி, அன்பான கீர்” எனப் பாராட்டியுள்ளார்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவை ஸ்டார்மர் தொடர்ந்து வலுப்படுத்தினார்.

இதற்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஸ்டார்மருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

“எப்போதும் தொடர்பில் இருந்து, தேவையான உதவிகளைச் செய்யத் துடித்ததற்கு நன்றி கீர். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்கு வரலாம், உங்களை வரவேற்கிறோம்” என ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி