நம்பகத்தன்மையை இழந்துவிட்டது ஐரோப்பா: ஈரான் விசனம்
ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன நடத்திய தாக்குதலின்போது போது ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்த அணுகுமுறையை ஈரான் கடுமையாக விமரிசித்துள்ளது.
மேற்படி போரின்போது ஐரோப்பிய சக்திகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தவறான கொள்கைகளால் உலக அரங்கில் ஐரோப்பாவின் நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்து கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
” எதிராகத் திணிக்கப்பட்ட இரண்டு போர்களின் போதும், ஐரோப்பிய நாடுகள் முற்றிலும் பொருத்தமற்ற மற்றும் தவறான நிலைப்பாடுகளையே எடுத்தன.
உலக நாடுகள் அனைத்தும் இந்த மோசமான நடத்தையை நேரடியாகக் கண்டுள்ளன,” என்று Esmaeil Baghaei மேலும் கூறியுள்ளார்.




