இலங்கை செய்தி

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை நிறுத்துமாறு இலங்கை அழைப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தப்பட்டு, உலக அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என அனைத்து தரப்புகளிடமும் கோருகின்றோம்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை குறித்து கருத்து வெளியிட்ட அவர், “ எங்கு நடந்தாலும், எவர் நடத்தினாலும் போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. போரால் உயிரிழப்புகளும், […]

உலகம்

போருக்குள் நுழையும் வளைகுடா நாடுகள்: பகிரங்க எச்சரிக்கை!

  • March 2, 2026
  • 0 Comments

  ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று வளைகுடா நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. “பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்கி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்” என்றும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் […]

இந்தியா

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் நேற்று போராட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டன. வேலை நிறுத்த போராட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை, பாகிஸ்தானிலும் சில இடங்களில் போராட்டங்கள் […]

செய்தி

மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து இலங்கை கழுகுப் பார்வை: விசா காலம் நீடிப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

  மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தேவைகளை கவனிப்பதற்கும் அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட […]

உலகம்

4 வாரங்களுக்கு போர் நீடிக்கும்: ஈரானில் 48 தலைவர்கள் பலி!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய இ ராணுவ நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட […]

உலகம் செய்தி

போர் உக்கிரம்: ஈரான் முன்னாள் ஜனாதிபதி பலி!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரானை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜஜாத் Mahmoud Ahmadinejad பலியாகியுள்ளார். சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நர்மக் பகுதியில் உள்ள அவரது வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவரும் அவரது பல பாதுகாப்புப் படையினரும் பலியாகியுள்ளனர். அதேவேளை, ஈரான்மீதான தாக்குதலை சீனா, ரஷ்யாh, வடகொரியா உள்ளிட்ட நட்பு நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை […]

செய்தி

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கமேனியின் மகன், மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான்மீதான கூட்டு போர் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக வடக்கு, கிழக்கில் போராட்டம்!

  • February 28, 2026
  • 0 Comments

“பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” எனும் முழக்கத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ‘தாயக செயலணி’ அமைப்பின் ஏற்பாட்டில் இந்த எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அங்கிருந்து பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்பினர், கல்விச் சமூகத்தினர் […]

செய்தி

யாழ்.நகரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: நீதவான் வழங்கியுள்ள உத்தரவு!

  • February 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் . நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார். அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கருவினை கடதாசி பெட்டியால் […]

இந்தியா தமிழ்நாடு

பா.ஜ.கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது: வைகோ திட்டவட்டம்!

  • February 28, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க. தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று MDMK அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ Vaiko தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வருடன் இன்று (28) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். “ தமிழக முதல்வரிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றது. தொகுதிப் பங்கீடு பற்றி முதல்வரிடம் எதுவும் பேசவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து ம.தி.மு.க. குழு முதற ;சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மீண்டும் […]

error: Content is protected !!