டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை செய்தி

இலங்கையில் 45 பேரின் உயிரை பலியெடுத்த டெங்கு

  • July 9, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 9,654 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 65,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில் மாத்திரம் 34,268 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 13,322 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,150 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,354 […]

Australia will export uranium to India under a new agreement signed today between Prime Minister Anthony Albanese and Indian Prime Minister Narendra Modi, as the leader of the world's most populous country continues his visit to Australia. ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா இணக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கன்பராவில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ், “2015 இந்தியா – ஆஸ்திரேலியா அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ், அமைதிப் பயன்பாட்டிற்காக இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான நிர்வாக ஏற்பாட்டில் (administrative arrangement) இன்று நாங்கள் கையெழுத்திட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறோம்” […]

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு - வெளியானது வர்த்தமானி இலங்கை செய்தி

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு – வெளியானது வர்த்தமானி

  • July 9, 2026
  • 0 Comments

கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வர்த்தமானி மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய போகம்பறை சிறைச்சாலை, முழுவதையும் உள்ளடக்கிய அதிகார வரம்புடன், ஒரு சிறைச்சாலையாக நிறுவப்படுவதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கவும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

வளைகுடாவிலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது ஈரான் தாக்குதல்

  • July 9, 2026
  • 0 Comments

குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணை அமைப்பு, கத்தாரில் உள்ள செயற்கைக்கோள் அமைப்பு (Satellite antenna early warning system) மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் ஆகியவையே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது. அதேவேளை, கடந்த 48 மணிநேரத்துக்குள் […]

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உலகம் செய்தி

நேட்டோ செயலர் மற்றும் ஐரோப்பிய நாடுகள்மீது ஈரான் கடும் விசனம்

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் Mark Rutte தெரிவித்த கருத்துக்களை ,ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், இப்போரில் ஐரோப்பிய நாடுகள் உடந்தையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரில் ஐரோப்பாவின் திட்டமிட்ட உடந்தையை மார்க் ருட்டே மீண்டும் மீண்டும் ஒப்புக்கொண்டிருப்பது, இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பில் அவர்கள் நடுநிலையாக செயல்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது,” என்று பகாய் […]

இலங்கை செய்தி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இந்திய பிரஜை பலி

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வட்டாரங்கள் ‘தி இந்து’ நாளிதழுக்கு உறுதிப்படுத்தியுள்ளன என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பலியானவர் 73 வயதுடைய உன்னிகிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை சிறைச்சாலை வரலாற்றிலேயே மிக கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இக்கலவரத்தில், படுகாயமடைந்திருந்த மேலும் ஒரு சிறை அதிகாரி புதன்கிழமை (ஜூலை 08, 2026) உயிரிழந்ததை அடுத்து, ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் […]

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெல்பர்ன் நகரை சென்றடைந்துள்ளார். ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

ஆஸ்திரேலியாவில் மோடிக்கு அமோக வரவேற்பு

  • July 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெல்பர்ன் நகரை சென்றடைந்துள்ளார். அந்நகரிலுள்ள டாக் lands மைதானத்தில் (Docklands Stadium) இந்தியப் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. “மெல்பர்ன் மீட்ஸ் மோடி” (Melbourne Meets Modi) என்ற பெயரில் நடத்தப்படும் இந்த இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நிகழ்வில் 20,000-க்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என அமைப்பாளர்கள் கணித்துள்ளனர். அதேவேளையில், இந்தியாவில் மனித உரிமைகள் நிலை […]

செய்தி விளையாட்டு

மொராக்கோ அணிக்கு பின்னடைவு: நட்சத்திர வீரருக்கு காயம்

  • July 9, 2026
  • 0 Comments

பிரான்ஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிக்கான மொராக்கோ அணியின் திட்டங்களுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர முன்கள வீரர் இஸ்மாயில் சைபாரி (Ismael Saibari) இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா அணிக்கு எதிரான ‘லாஸ்ட்-16’ (சுற்று-16) சுற்று ஆட்டத்தின் போது சைபாரிக்கு தொடை தசைநார் (Hamstring) காயம் ஏற்பட்டது. இந்த முக்கிய நாக்-அவுட் போட்டிக்கு முன்னதாக அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்று அணியின் பயிற்சியாளர் முகமது […]

இலங்கை செய்தி

நீர்கொழும்பிலிருந்து பெண் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம் வெடித்ததையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 வெளிநாட்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர். சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது. மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை […]

ஈரான்மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் , கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. உலகம் செய்தி

தாக்குதல்கள் உக்கிரம் – எண்ணெய் விலை மேலும் அதிகரிப்பு

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் , கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, இரு முக்கிய கச்சா எண்ணெய் குறியீடுகளும் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் நிலைபெற்றன. புதன்கிழமை வர்த்தக அமர்வின் முடிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 5%-க்கும் மேல் உயர்ந்து $78.02 ஆக நிலைபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த […]