இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் அடையாளம்! அகழ்வுப் பணிகள் தீவிரம்!!

  • May 2, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட மூன்று மனித எலும்புக்கூடுகளையும் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 244 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டவற்றில் 240 மனித எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன […]

உலகம் செய்தி

ஈரானுக்கு கட்டணம் செலுத்தினால் பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை!

  • May 1, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள், ஈரானுக்கு எவ்விதக் கட்டணத்தையும் செலுத்தக்கூடாது என அமெரிக்கக் திறைசேரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பான கடல் வழி பயணத்திற்காக ஈரானிய அமைப்புகளுக்கோ அல்லது தொண்டு நிறுவனங்களுக்கோ நிதி உதவி வழங்குவது விதிமீறலாகவே கருதப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய பணப்பரிமாற்றங்கள் டிஜிட்டல் நாணயம் அல்லது நேரடிப் பணம் என எந்த வடிவில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. ஈரான் கோரும் சட்டவிரோதக் கொடுப்பனவுகளைத் […]

உலகம் செய்தி விளையாட்டு

FIFA மாநாடு: இஸ்ரேலுடன் மேடையேற பாலஸ்தீனம் மறுப்பு!

  • May 1, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் நடைபெற்ற FIFA கால்பந்து மாநாட்டில், பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் தலைவர் Jibril Rajoub இஸ்ரேலிய பிரதிநிதியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள மறுத்துள்ளார். இஸ்ரேலிய கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவருடன் இணைந்து நிற்குமாறு FIF தலைவர் வேண்டுகோள் விடுத்தபோதே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்தார். இஸ்ரேலின் செயல்களை மறைக்க இவ்வாறான மேடையை பயன்படுத்தக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு மத்தியில் இஸ்ரேலியப் பிரதிநிதிகளுடன் கைகுலுக்க முடியாது என பாலஸ்தீன தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த […]

உலகம் செய்தி

போர் நிறுத்த காலப்பகுதியில் ஈரான், அமெரிக்கா செய்வது என்ன?

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்தை இரு நாடுகளும் தங்களின் இராணுவ உத்திகளை மறுபரிசீலனை செய்ய பயன்படுத்திவருகின்றன. ஏனெனில் அமைதி பேச்சு தோல்வியடைந்தால் எதிர்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட போர் நடவடிக்கைகளுக்கு இரு தரப்பும் தயாராக வேண்டியுள்ளது. அமெரிக்கா தனது ஏவுகணை வலிமையை அதிகரித்துள்ள போதிலும், நேரடித் தரைப்போருக்கு இன்னும் தயாரில்லை என தெரியவருகின்றது. மறுபுறத்தில் ஈரான் ஹார்முஸ் நீரிணையை தனது முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. எனினும், சர்வதேசக் கூட்டமைப்பு உருவாகும் பட்சத்தில் ஹார்முஸ் நீரிணையை அந்நாடு திறக்கக்கூடும் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு சஜித் சவால்!

  • May 1, 2026
  • 0 Comments

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார். “ஐக்கிய மக்கள் சக்தி பலவீனமான எதிரணி எனக் கூறுவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆனால் பலம்பொருந்திய அரசாங்கத்தின் சபாநாயகரை வீட்டுக்கு அனுப்பினோம். எரிசக்தி அமைச்சரை வீட்டுக்கு அனுப்பினோம். எனவே, நாம் வலுவாகவே இருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியும் எம்முடன் இணையும். இந்த […]

அரசியல் இலங்கை செய்தி

சமஷ்டி கட்டமைப்பிலான புதிய அரசமைப்பு வேண்டும்: தமிழரசுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்!

  • May 1, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் சார்பில் 10 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய உழைப்பாளிகள் தினப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அந்தப் பிரகடனத்தின் முக்கிய விவரங்கள் வருமாறு:- சம்பள உயர்வு: பொருளாதாரச் சிக்கல், ‘டித்வா’ புயல் மற்றும் மேற்காசிய போர்ச் சூழலால் வீழ்ச்சியடைந்துள்ள ரூபாவின் பெறுமதியைக் கருத்திற்கொண்டு, நாளாந்தச் சம்பளம் பெறுவோரின் ஊதியம் கணிசமாக […]

உலகம் செய்தி

ஈரானால் இனி முடியாது: ஒப்பந்தம் செய்ய துடிக்கிறது என்கிறார் ட்ரம்ப்!!

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை செய்து கொள்ள ஈரான் அதிக விருப்பம் கொண்டுள்ளது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “போர்நிறுத்தத்தை மீறுவதற்கு நீங்கள் அவசரப்படுகிறீர்களா?” என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “போரை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் ஈரான் பாதுகாப்புப் படைகளின் திறன்களை கடுமையாகப் பலவீனப்படுத்தியுள்ளன. ஈரானின் கடற்படை அழிந்துவிட்டது. விமானப்படை அழிந்துவிட்டது. அதேபோல ஆளில்லா விமான […]

உலகம் செய்தி

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்போம்: லெபனான் பிரதமர் சபதம்!

  • May 1, 2026
  • 0 Comments

லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று லெபனான் பிரதமர் Nawaf Salam உறுதியளித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. “ லெபனானின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனானில் நிலையான தன்மையைக் கொண்டுவருவதற்கும், உண்மையான முன்னேற்றப் பாதையில் நாட்டை வழிநடத்துவதற்கும் தமது அரசு உழைக்கும் என்று Nawaf […]

அரசியல் இலங்கை செய்தி

முதலாளிகளின் முகவர்களே எதிரணிகள்: ஆளுங்கட்சி எம்.பி. விளாசல்!

  • May 1, 2026
  • 0 Comments

மலையக மக்களுக்கு நிச்சயம் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “உலக தொழிலாளர் தினத்தை எதிரணிகள் மறந்துள்ளன. ஏனெனில் உலக முதலாளிகளின் முகவர்களாகவே அவை செயல்பட்டுவருகின்றன. மலையக மக்களுக்குரிய உரிமைகள் கடந்தகாலங்களில் மறுக்கப்பட்டன. […]

உலகம் செய்தி

மேற்காசிய போரால் ஆட்டம் காணும் சிங்கப்பூர் பொருளாதாரம்!

  • May 1, 2026
  • 0 Comments

மேற்காசிய போர்ச்சூழ்நிலையால் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் குறையக்கூடும் என்று அந்நாட்டின்  பிரதமர் லாரன்ஸ் வோங் எச்சரித்துள்ளார். வளைகுடா நாடுகளின் எரிசக்தி விநியோகத்தைச் சார்ந்துள்ள ஆசிய நாடுகள், இந்த மோதலினால் ஏற்படும் விலைவாசி உயர்வு மற்றும் விநியோகத் தடைகளால் நேரடியாகப் பாதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், அமெரிக்க இராணுவத் தளபதிகள்,ஜனாதிபதி ட்ரம்பிடம் ஈரான் மீதான புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலால் உலகளவில் பணவீக்கம் அதிகரித்து, சில நாடுகள் […]

error: Content is protected !!