இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

முன்னாள் காவல்துறை மா அதிபர் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு

  • July 17, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் காவல்துறைமா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றிய சந்தன விக்ரமரத்ன,இலங்கையின் 35வது காவல்துறைமா அதிபராகப் பதவி வகித்திருந்தார்.

“தலைமைத்துவத்தை ஏற்பதற்கு ஜென்சி தலைமுறை முன்வர வேண்டும். அதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்குவதற்கு தயார்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கை செய்தி

தலைமையேற்க Gen Z தலைமுறைக்கு ரணில் அழைப்பு

  • July 17, 2026
  • 0 Comments

“தலைமைத்துவத்தை ஏற்பதற்கு ஜென்சி தலைமுறை முன்வர வேண்டும். அதற்குரிய ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்குவதற்கு தயார்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இளைஞர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாம் எமது காலப்பகுதியில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டோம். ஜே.ஆர்.காலத்தில் எமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. எமது சிந்தனைகளுக்கு இடமளிக்கப்பட்டது. முன்னோக்கிச்சென்றோம். எமது காலத்தில் எமது சிந்தனை பற்றி பெற்றோருக்கு புரிதல் இருக்கவில்லை. இன்று காலம் மாறிவிட்டது. […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் இன்று (16) அடையாளம் காணப்பட்டன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 06 எலும்புக்கூடுகள் அடையாளம்

  • July 16, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் இன்று (16) அடையாளம் காணப்பட்டன. செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணி  இன்று (16) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. அகழாய்வின் 34ஆவது நாளான இன்று , மேலும் 6 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து, இதுவரை […]

வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கை செய்தி

சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம் வகுக்கிறது இலங்கை

  • July 16, 2026
  • 0 Comments

வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு மற்றும் 2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கலந்துரையாடல் இன்று […]

"கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்; அம்மாவட்டத்தைக் கைவிட மாட்டோம். இலங்கை செய்தி

அர்ச்சுனா எம்.பியை கரடியுடன் ஒப்பிட்ட அமைச்சர்

  • July 16, 2026
  • 0 Comments

“கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்; அம்மாவட்டத்தைக் கைவிட மாட்டோம். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு இன்றைய சம்பவமே மற்றுமொரு சான்றாகும் எனவும் அமைச்சர் கூறினார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்று ஏற்பட்ட […]

இலங்கை செய்தி

நவீனமயமாகிறது யாழ்ப்பாண விமான நிலைய முனையம்

  • July 16, 2026
  • 0 Comments

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்தான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் துறைமுக அதிகார சபையின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டம், காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தித் […]

கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி வடிவ அஸ்திபாலா (Astypalaia) தீவு எந்தப் பயனையும் பெறவில்லை. ஐரோப்பா செய்தி

வறட்சியால் திணறும் Greek தீவு

  • July 16, 2026
  • 0 Comments

கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி வடிவ அஸ்திபாலா (Astypalaia) தீவு எந்தப் பயனையும் பெறவில்லை. குடிநீருக்காக முழுமையாக பாட்டில் தண்ணீரை நம்பியிருக்கும் இத்தீவு, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது இரண்டாவது மிக மோசமான வறண்ட காலநிலையை எதிர்கொண்டுள்ளது. இத்தீவில் 1990களின் பாதியில் கட்டப்பட்ட ஒரேயொரு […]

திருகோணமலை நிலாவெளி வள்ளுவர் வீதியில் வீடு ஒன்றில் யானை தந்தங்களை வைத்திருந்த நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். செய்தி

திருகோணமலையில் யானை தந்தங்களை வைத்திருந்தவர் கைது

  • July 16, 2026
  • 0 Comments

திருகோணமலை நிலாவெளி வள்ளுவர் வீதியில் வீடு ஒன்றில் யானை தந்தங்களை வைத்திருந்த நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது யானை தந்தம் மீட்கப்பட்டுள்ளது. விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டி. திலகரத்ன மற்றும் எச்.எம்.டி. மாலித் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யானை தந்தத்துடன் […]

ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்களை இலக்கு வைப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. உலகம் செய்தி

வளைகுடாவிலுள்ள எரிசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

  • July 16, 2026
  • 0 Comments

ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்களை இலக்கு வைப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதுவரை கடைப்பிடித்து வந்த பொறுமை கொள்கையை கைவிட்டு, கடுமையான பதிலடி கொடுக்க அந்நாட்டு இராணுவம் தயாராகி வருகிறது. குறிப்பாக, உலகின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் மீது நிரந்தர இறையாண்மையையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்ட ஈரான் திட்டமிட்டுள்ளது. இந்த நீர்ச்சந்தியை ஒரு பாதுகாப்பு அரணாக ஈரான் கருதுவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து […]

அர்ச்சுனாவால் போர்க்களமானது அபிவிருத்திக்குழு கூட்டம் இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அர்ச்சுனாவால் போர்க்களமானது அபிவிருத்திக்குழு கூட்டம்

  • July 16, 2026
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது இன்று (16) கடுமையான வாக்குவாதமும் பெரும் குழப்பநிலையும் ஏற்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். மேலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். […]