அர்ச்சுனாவால் போர்க்களமானது அபிவிருத்திக்குழு கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது இன்று (16) கடுமையான வாக்குவாதமும் பெரும் குழப்பநிலையும் ஏற்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். மேலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். […]













