இலங்கை செய்தி

நாமல் ராஜபக்ச கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, லஞ்ச – ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ (Airbus) விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று காலை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எழுத்துப்பூர்வமாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்று (04) காலை ஆணைக்குழுவில் ஆஜரானார்.
சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை