உலகம் செய்தி

அமைதி முயற்சி தொடர்கிறது: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

  • April 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல்களைத் தணிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை நடைபெற்ற இருதரப்புப் அமைதி பேச்சு எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இந்நிலையிலேயே மேற்படி கலந்துரையாடலுக்கு மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தானின் பிரதமர், அமைதியை ஏற்படுத்துவதற்குரிய முயற்சி தொடர்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். தீர்க்கப்படாத சிக்கல்களைச் சரிசெய்ய பாகிஸ்தான் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அமைச்சரவைக் கூட்டத்தில் […]

உலகம் செய்தி

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கி சீனாவை இலக்கு வைக்கும் ட்ரம்ப்!

  • April 13, 2026
  • 0 Comments

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவதன் மூலம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சீனா தனது எரிசக்தி தேவைகளுக்கு ஈரானை அதிகம் நம்பியுள்ளதால் இந்தத் தடையின் மூலம் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா கருதுகின்றது. அவ்வாறு நடந்தால் ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு சீனா வற்புறுத்தும் என வாஷிங்டன் கருதுகின்றது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்ஓர் அங்கமாகவே ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்காக பெரிய அளவிலான […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: சர்வதேச மாநாட்டை நடத்த தயாராகும் பிரான்ஸ், பிரிட்டன்!

  • April 13, 2026
  • 0 Comments

“ஹார்முஸ் நீரிணை வழியாக தடையற்ற, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிசெய்வதற்குரிய சர்வதேச முயற்சிக்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தலைமை வகிக்கும்.” இவ்வாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன் Emmanuel Macron தெரிவித்தார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கத்திலேயே அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதலுக்கு, இராஜதந்திர வழியில் நீடித்த தீர்வை காண அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். தீர்வு திட்டமானது […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க எச்சரிக்கைக்கு எதிர்வினையாற்றியது சீனா! பிரிட்டனும் கைவிரிப்பு!!

  • April 13, 2026
  • 0 Comments

ஹார்மூஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களும் முற்றுகையிடப்படும் என அமெரிக்க தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், அனைத்து தரப்புகளும் அமைதியை பின்பற்ற வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. ஊலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹார்முஸ் நீரிணை தடையின்றி இயங்குவது அவசியம் என்று சீனா வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்க சீனா தயார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனவே, […]

உலகம் செய்தி

ட்ரம்பின் துறைமுக முற்றுகை வியூகத்துக்கு ஈரான் ராணுவம் பதிலடி!

  • April 13, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகைத் திட்டத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. துறைமுகங்கள் முடக்கப்பட்டால் அதனை கடற் கொள்ளை செயலாகக் கருதி பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை தமது நாட்டு கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனினும், இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை திறக்குமாறு பல தடவைகள் ஈரானிடம் ட்ரம்ப் வலியுறுத்திவிட்டார். ஆனால் ஈரான் இதற்கு இணங்கவில்லை. இந்நிலையிலேயே […]

உலகம் செய்தி

ஈரான், அமெரிக்கா மீண்டும் பேச்சு நடத்த வேண்டும்: 10 நாடுகள் கூட்டாக வலியுறுத்து!

  • April 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நிரந்தர போர் நிறுத்த ஏற்பட வேண்டும் என ஆசியான் ASEAN நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இஸ்லாபாமாத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையிலேயே மேற்படி வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வர்த்தகத்திற்கு அவசியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆசியான் வெளிவிவகார அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். எரிசக்தி இறக்குமதிக்கு ஹார்முஸ் நீரிணை வழியை பெரிதும் நம்பியிருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், சர்வதேச […]

இந்தியா செய்தி

மூட நம்பிக்கையின் உச்சம்: சிறுவன் பலி! நடந்தது என்ன?

  • April 13, 2026
  • 0 Comments

பாம்பு தீண்டலுக்கு இலக்கான சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, மந்திரவாதியிடம் பெற்றோர் அழைத்துச் சென்றதால் அச்சிறுவன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். இந்தியா, உத்தர பிரதேசத்திலேயே இப்பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு தீண்டியுள்ளது. அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, பெற்றோர் மந்திரவாதியை நாடியுள்ளனர். குறித்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் […]

உலகம் செய்தி

“நேட்டோவுக்கான நிதி கடலில் போடும் பணம்:” ட்ரம்ப் கடுப்பு!

  • April 13, 2026
  • 0 Comments

நேட்டோ NATO அமைப்புக்காக அமெரிக்கா டிரில்லியன் கணக்கிலான டொலர்களை செலவிடுவது தேவையற்றது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ நாடுகளின் உதவியை ட்ரம்ப் கோரி இருந்தார். எனினும், அந்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்தன. இதனையடுத்து நேட்டோமீது ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நோட்டோ அமைப்பு காகித புலி என்றுகூட முத்திரை குத்தி இருந்தார். எனவே, நேட்டோவுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இனி தீவிரமாகப் பரிசீலிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதன் […]

இலங்கை செய்தி

“கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்”

  • April 13, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் கடற்படையின் இரு போர்க்கப்பல்கள் நேற்று (13) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. நல்லெண்ணப் பயணமாகவே பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS Taimur’ மற்றும் ‘PNS Aslat’ ஆகிய போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன. பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களுக்கு இலங்கைகடற்படையால் சம்பிரதாயப்பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது. கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படையுடன் இணைந்து பாகிஸ்தான் கற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளது என தெரியவருகின்றது. இந்தப் பயிற்சி இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தி, கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் செய்தி

போரை எதிர்த்த Pope Leo XIVமீது ட்ரம்ப் விமர்சனக்கணை தொடுப்பு!

  • April 13, 2026
  • 0 Comments

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தையை Pope Leo XIV, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். திருத்தந்தை, சர்வதேச உறவுகளில் மிகவும் பலவீனமாகச் செயல்படுகின்றார் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவானவர் எனவும் முத்திரை குத்தியுள்ளார். திருத்தந்தையின் கருத்துகள் தார்மீக அடிப்படையில் அமைந்திருந்தாலும், டிரம்ப் அதனைத் தனது வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானதாகவே கருதி வருகின்றார். திருத்தந்தை அமெரிக்கர் என்றபோதிலும், டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளை அவர் எதிர்த்து […]