இலங்கை செய்தி

யாழில் சுகாதார தொண்டர்கள் நீதிகோரி போராட்டம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் பல வருடங்களாக சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வருபவர்கள், இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியமனம் வழங்கலுக்கான நேர்முகத் தேர்வில் தம்மை உள்வாங்காது அநுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளை (6) நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் எனக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வடக்கு மாகாண ஆழுநளுனர் அலுவலகம் வரை சென்று, மதியம் வரை நீடித்தது.

“ நாம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த சேவையை நிலையான ஊதியம் கூட இன்றி முன்னெடுத்துவருகின்றோம்.

கொழும்பில் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது சேவையில் இருக்கும் 120 பேருக்கும் சேவையின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் இன்று அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள நேர்முக தேர்வுக்கு 92 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் சேவையில் இருந்த 15 பேரே உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மிகுதி 77 பேரும் வைத்தியசாலையில் எந்தவொரு சேவையையும் முன்னெடுக்காத அனுபவமற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் மற்றும் இளங்குமரன் ஆகியோர் வருகைதந்து பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!