உலகம் செய்தி

உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் இஸ்ரேல்: பிரிட்டனிலும் கடும் அதிருப்தி!

சர்வதேச அளவில் இஸ்ரேலின் நற்பெயர் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேற்படி ஆய்வில் பங்கேற்ற 36 நாடுகளில் பெரும்பாலானவற்றில், பெரும்பான்மையான மக்கள் இஸ்ரேல் குறித்து எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 8 முதல் மே 13 வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நாடுகளில் உள்ள முதியவர்களில் 67 சதவீதமானோர்பேர் இஸ்ரேல்மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வெறும் 25 சதவீதமானோரே இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தொடுத்த போருக்குப் பின்னரே பெரும்பாலான நேர்காணல்கள் நடத்தப்பட்டதாக Pew நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கை உலகளவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டிருந்த முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இஸ்ரேல் மீதான விரோதப் போக்கு மிகத் தெளிவாக புலப்பட்டுள்ளது.

காசாவில் தங்களால் இந்த ஆய்வை நடத்த முடியவில்லை என்றும் Pew நிறுவனம் கூறியுள்ளது.

ஐரோப்பிய பொதுமக்களும் இதற்கு சற்றும் சளைக்காத விரோதப் போக்கைக் கொண்டுள்ளனர்.

இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு அல்லது அதற்கும் அதிகமான முதியவர்கள் இஸ்ரேல் குறித்து “மிகவும் மோசமான” கருத்துக்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

காசா இனப்படுகொலையால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இஸ்ரேலின் சர்வதேசப் பிம்பம், ஈரான் மீதான போருக்குப் பிறகு மேலும் மோசமடைந்துள்ளது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.

அர்ஜென்டினாவில் 2025 ஆம் ஆண்டில் 46 சதவீதமாக இருந்த இஸ்ரேல் மீதான எதிர்மறையான பார்வை, தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா, இத்தாலி, நைஜீரியா, போலந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இஸ்ரேல் மீது “மிகவும் மோசமான” கருத்துக்களைக் கொண்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் அதிகரித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!